மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு வரைவு தீர்மானங்கள் தொடர்பாக புதனன்று திண்டுக்கல்லில் மண்டல பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, ஜி.ராணி, மாவட்டச்செயலாளர்கள் மா.கணேசன் (மதுரை மாநகர்), கே.ராஜேந்திரன் (மதுரை புறநகர்), அ.குருசாமி (விருதுநகர்), கே.பிரபாகரன் (திண்டுக்கல்), எஸ்.ராமச்சந்திரன் (தேனி), அரு.மோகன் (சிவகங்கை) மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு மற்றும் மாநில உபகுழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.