ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யிடம் மாநாட்டு நிதி ரூ.21,000 வழங்கிய கட்டுமானத் தொழிலாளர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த மாநாட்டிற்கு நிதியாக ரூ.21 ஆயிரத்தை ஒட்டன்சத்திரம் வட்டம் வளையபட்டியைச் சேர்ந்த சிபிஎம் கட்டு மானத் தொழிலாளர்கள் கிளையின் சார்பாக சிபிஎம் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,யிடம் வழங்கினர். ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டை அருகேயுள்ள வளையபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உள்ளது. இந்த கிளையில் உள்ளவர்களில் பெரும் பாலானவர்கள் கட்டுமானத் தொழிலா ளர்கள் ஆவர். கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுவதை யொட்டி இக்கிளையின் உறுப்பினர்கள் சார் பாக மாநாட்டு நிதி வழங்க முடிவெடுத்தனர். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் சிபிஎம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து தாங்கள் வசூலித்த தொகை ரூ.21 ஆயிரத்தை வழங்கினர். இந்நிகழ்வின் போது கட்சியின் ஒன்றியச்செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றியக்குழு உறுப்பி னர் முருகேசன் ஆகியோர் உடனிருந்த னர். வளையபட்டி கிளைச் செயலாளர் தேவி, கணேசன், வெள்ளைச்சாமி ஆகியோர் நிதி வழங்கினர். நிதி வழங்கிய வளைய பட்டி கிளைத் தோழர்களையும் அவர்க ளின் குடும்பத்தாரையும் ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி., பாராட்டினார். (ந.நி)