மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அக்டோபர் 20 ஞாயிறன்று தமது 102வயதை எட்டினார். திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வரும் தோழர் வி.எஸ்., 1923 அக்டோபர் 20 அன்று பிறந்தவர். மனைவி வசுமதி, மகன் அருண்குமார், மகள் ஆஷா உள்ளிட்ட குடும்பத்தினரின் பராமரிப்பில் உள்ள தோழர் வி.எஸ்., நாளிதழ்களை வாசித்து தகவல்களை அறிந்து கொள்கிறார். முதுமை காரணமாக அவரை திரளாகச் சென்று தோழர்கள் பார்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தோழர் வி.எஸ்., பிறந்த நாளையொட்டி கட்சியின் தலைவர்களும் தோழர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.