சேலம்,டிச.19- நூற்றாண்டு காணும் சிபிஎம் மூத்த தலைவர் தோழர் கே.ஆர். கண்ணன் அவர்களை, சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சமூகத்தின் பால் கொண்ட அக்கறை யின் காரணமாக இளம் வயது முதல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதய மான தினத்தில் இணைந்து தற்போது வரையில் தனது குடும்பத்தினரையும், கட்சிக் குடும்பமாக நிலைக்கச் செய்த வர். சேலம், ஓமலூர் சுற்றுவட்டார கிரா மங்களில் செங்கொடி இயக்கத்தை வலுவான அமைப்பாக மாற்றியவர் தோழர் கே.ஆர்.கண்ணன். விடு தலைப் போராட்டத்தில் பங்கேற்றது, தலைமறைவு காலத்தில் செங்கொடி இயக்கத்தின் தலைவர்களை பாது காத்தது, உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக போர்க்குரலை உயர்த்தியது. இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் சிறை சென்றது என்ற மகத்தான பெருமிதங்களுடன் மனித குலத்தின் விடுதலைக்கு மார்க்சியமே தீர்வு என உறுதியான நிலைப்பாட்டோடு இயங்கி வருகிற மூத்த தலைவர் தோழர் கே.ஆர்.கண்ணன் டிசம்பர் 23 அன்று தனது நூறாவது அகவையை எட்டுகிறார்.
திங்களன்று சேலம் வந்திருந்த சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் தோழர் கே.ஆர்.கண்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவருடன், சிஐடியு சேலம் மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்ட தலைவர் டி.உதயகுமார், மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல்வம் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். தலைவர்கள் நேரில் சந்தித்தது தோழர் கே.ஆர். கண்ணன் அவர்களின் குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 85 வருடங்களாக கம்யூனிசக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வாழும் வரலாறாகத் திகழும் தோழர் கே.ஆர்.கண்ணன் அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். (ந.நி.)