tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, சமரசமின்றி தொடர்ந்து போராடும் டி.ஆர்.இ.யூ செயல் தலைவர் அ. ஜானகிராமன் பணி நிறைவு பாராட்டு விழா டி.ஆர்.இ.யூ, சி.ஐ.டி.யூ பொன்மலை ஒர்க் ஷாப் டிவிஷன் மற்றும் வேலை நியமனம் பெற்ற ஆக்ட் அப்ரண்டீஸ் தோழர்கள் சார்பில், வியாழனன்று பொன்மலை ஆர்மரிகேட் அருகில் நடைபெற்றது.  விழாவிற்கு டி.ஆர்.இ.யூ கோட்டத் தலைவர் லெனின் தலைமை தாங்கினார். கோட்ட துணைத் தலைவர் சங்கர் வரவேற்புரை ஆற்றினார். கோட்ட உதவி தலைவர்கள் ராஜசேகர், உச்சிமாகாளி, பத்ரூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர், டி.ஆர்.இ.யு உதவி பொதுச் செயலாளர் சந்தானசெல்வம், டி.ஆர்.பி.யூ உதவி பொதுச் செயலாளர் மகேந்திரன், கோட்டச் செயலாளர் மனோகரன், சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிசெல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில், டீசல் கிளைச் செயலாளர் பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார்.