நாகப்பட்டினம், ஏப்.5- நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷினி. இவர் பாப்பா கோவில் ஊராட்சியில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் இரண் டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக் கட்டணம் செலுத்தா ததால் வகுப்பறை வாயிலில் நிற்க வைத்தது, மாணவர்கள் முன் அவமரியாதையாக நடத் தியது உள்ளிட்ட காரணங்க ளால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் தற்கொலை செய்து செய்துகொண்டார். இதனால் மாணவியின் தற் கொலைக்கு காரணமான கல் லூரி நிர்வாகத்தின் மீது காவல் துறை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இதர பிரிவு களின் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் குற்றவாளி களை கைது செய்யக்கோரி யும். மாணவியின் குடும்பத் திற்கு ரூ.25 லட்ச ரூபாய் இழப் பீடு கேட்டும்.மெத்தனமாக செயல்படும் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்தும்.நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடை பெறுமென அறிவிக்கப்பட்டி ருந்தது.
இந்த நிலையில் நாகப்பட்டி னம் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை கண்கா ணிப்பாளர் ஆகியோர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தை யில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் கலந்து கொண்டனர். முன் வைக்கப்பட்ட கோரிக்கை களை உரிய முறையில் பரி சீலித்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர்.
இதன டிப்படையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் தக வல்களை சுபாஷினியின் பெற் றோர்களிடம் தலைவர்கள் தெரி வித்தனர். இதையடுத்து அவ ரது பெற்றோர்சுபாஷினியின் உடலை ஆறு தினங்களுக்கு பிறகு பெற்றுக் கொண்டனர். எஸ்எப்ஐ போராட்டம் இதற்கிடையில் தற்கொ லைக்குக் காரணமான கல்லூரி தாளாளர் ஆனந்த், முதல்வர் லட்சுமி காந்தன், வகுப்பு ஆசி ரியர் ஜெனிஷா ஆகியோரை உடனடியாக கைது செய்து வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதில் மாநிலத் தலைவர் ஏ.ட்டி. கண் ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ, புவின், அஜித்குமார், முரளி, அவினாஷ், ஹரி உட்பட ஏரா ளமானோர் கலந்துகொண்ட னர். பின்னர் நடைபெற்ற மாண வியின் இறுதி நிகழ்ச்சியில் இந் திய மாணவர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.