சிஐடியு தோழர் பூமாலை படத்திறப்பு
திருச்சிராப்பள்ளி, ஜூன் 8 - சிஐடியு கட்டுமான சங்க திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக செயல்பட்ட, மறைந்த தோழர் பூமாலை படத்திறப்பு ஞாயி றன்று சிஐடியு மாவட்ட அலுவலகமான வெண்மணி இல்லத்தில் நடந்தது. படத்திறப்புக்கு மாவட்டத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். தோழர் பூமாலை படத்தை, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன் திறந்து வைத்தார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத், பொருளாளர் பன்னீர்செல்வம், விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் ஆகி யோர் அஞ்சலி உரையாற்றினர். பின்னர் தோழர் பூமாலை குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.1 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கட்டு மான சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.