தஞ்சை தரணியில் செங்கொடி இயக்கம் தாக்குதல்கள் பலவற்றையும் சந்தித்துவந்திரு க்கிறது. செங்கொடி விவசாயி களின் இயக்கத்தை நிலப்பிரபுக்க ளும், அரசும், இரத்த வெள்ள த்தில் மூழ்கடிக்கச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். இரணியன், சிவராமன், களப்பால் குப்பு, முதல் பூந்தாழங்குடி பக்கிரியோடு கீழ்வெண்மணித் தியாகிகள் வரை எத்தனையோ தியாகச் செம்மலர்களைத் தாங்கிய மண் ஒன்றுபட்ட தஞ்சை மண். இந்த தியாகத் தழும்பேறிய விவசாய இயக்கத்தின் வீரப்புதல்வர்கள் 1982 ஜனவரி-19 அன்றும் இந்திய நாடுமுழுவதிலும் உள்ள தொழி லாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் சேர்த்துப் போராடினார் கள். இப்படித் தொழிலாளர்க ளோடு இணைந்து நின்றுபோரா டிய விவசாய இயக்க தோழர்கள் மீது தமிழக அதிமுக அரசு துப்பாக்கி முனையை நீட்டியது இந்த துப்பாக்கி சூட்டிற்கு பலியான தியாக செம்மலர்கள் அஞ்சான், நாகூரான், ஞான சேகரன் மூவருக்கும் நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலியை உரித்தாக்குவோம்.
போராட்டப் பின்னணி
இந்திய வரலாற்றில், 1982 ஜனவரி-19 ஒரு புதியதிருப்பு முனையாக அமைந்தது. தேச விடுதலைக்கு பிறகு, பொதுப் பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திய உழைப்பாளி மக்கள் நடத்திய நாடுதழுவிய பொது வேலை நிறுத்தம் தொழிலாளி வர்க்கத்தின் வலிமையை எதிரி வர்க்கத்திற்கு எடுத்துக்காட்டியது மட்டுமல்ல, தங்களது எல்லை யற்ற வலிமையை தாங்களே உணர்ந்து கொள்ளவும் உதவி செய்தது. 1980 ஆம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் பெரு முதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டது. மறுபுறத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக் கூடிய சாதாரண உழைப்பாளி மக்கள் மீது சொல்லொண்ணா தாக்குதலை தொடுத்தது. கடன் பெறுவதற்காக ஐஎம்எப் விதித்த நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக, ஊதியம் குறைக்கப்பட்டது. உற்பத்தி செலவை குறைத்தார்கள். மக்க ளுக்கான மானியத்தை வெட்டி னார்கள். பொதுத்துறைகளை தனியார்மயமாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார்கள். *விவசாயிகளுக்கான மானி யத்தை சுருக்கினார்கள். கடுமை யான விலைவாசி உயர்வு. மறுபுறத்தில் அமெரிக்க ஏகாதி பத்தியம் பல்வேறு வழிகளில் ராணுவ தளவாடங்களையும், ராணுவ துருப்புகளையும் அமைத்து யுத்த அபாயத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி ஏகாதிபத்தியத்தை எதிர்ப் பதற்கு பதிலாக முழுக்க முழுக்க முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ கொள்கைகளை பாது காப்பதையே தனது லட்சியமாக கொண்டு செயல்பட்டது. ஒன்றிய அரசின் இத்தகைய நாசகர கொள்கையை எதிர்த்து நாடெங்கி லும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. சிஐடியு முன் முயற்சியில் 1981 ஆம் ஆண்டு ஜூலை 4இல் மும்பையில் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டு நவம்பர் 23 தில்லி யில் பிரம்மாண்டமான அணி வகுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவின் அடிப் படையில் தலைநகர் தில்லி மாநகரை சிவப்பாக்கும் வகையில் உழைப்பாளிகளின் எழுச்சிமிகு அணி வகுப்பு கம்பீரமாக நடைபெற்றது. ஒன்றிய-மாநில அரசு ஊழி யர்கள், வங்கி, காப்பீடு, தபால், தந்தி, பாதுகாப்பு, துறைமுகம், நிலக்கரி சுரங்க தொழிலாளர் கள், ஆலைத் தொழிலாளிகள், துறைவாரியான உழைப்பாளி கள், மாணவர்கள், வாலிபர்கள், மாதர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றாகக் கூடி ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அவரவர் மொழியில் கோசமிட்டது பார்ப்பவர்களை பரவசப் படுத்தியது. பேரணி இறுதியில் ஜனவரி 19 அன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
வேலை நிறுத்த அறிவிப்பு வெளிவந்தவுடன் இது ‘தேச துரோகம்’ என ஆட்சியாளர்கள் கூக்குரலிட்டனர். பிரதமர் நேரிடையாகவே எச்சரித்தார். உள்துறை அமைச்சரும் அதே பாணியை பின்பற்றினார். இந்திரா காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச் சர்கள் மாநாடு நடத்தி அடக்குமுறைக்கு திட்டமிடப் பட்டது. வேலை நீக்கம், சம்பள வெட்டு, சிறைவாசம் என ஒன்றன்பின் ஒன்றான மிரட்டல் கள். கண்டதும் சுட்டுத்தள்ளு என உத்தரவிட்டார் பீகார் முதல்வர். அரசின் பிரச்சாரக் கருவிகளான வானொலியும், தொலைக்காட்சியும் வேலை நிறுத்தத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டன. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை என்று சொல்லி கைது செய்து சிறையில் அடைக்க ப்பட்டனர். எந்த தேசிய பாது காப்புச் சட்டம் எனும் ஆள்தூக்கிச் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதோ அதே கருப்புச் சட்டத்தை பயன் படுத்தி நூற்றுக்கணக்கான வர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டினால் 10 பேர் பலியானார்கள் மற்றும் கேரளாவில் இந்திரா காங்கிரஸ் கட்சியினரால் 2 பேர் குத்தி கொலை செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அஞ்சான், நாகூரான், ஞான சேகரன் கொல்லப்பட்டனர்.
எதிர் நோக்கும் சவால்கள்
2021ம் ஆண்டு நிறைவுபெற்று 2022ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். கடந்த 7 ஆண்டு களாக மக்கள் துன்பத்தை தவிர வேறுஎதையும் அனுபவிக்க வில்லை. `வளர்ச்சியின் நாயகன்` என்று தம்பட்டம் அடித்து ஆட்சிக்கு வற்தார் மோடி அந்த வளர்ச்சி யின் லட்சணம் பற்றி புள்ளி விவரங்கள் தெளிவாக்கிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தில் பின்ன டைவு அந்நிய செலாவணி கையிருப்பு நாளுக்குநாள் குறைந்து வருவது இதைத்தானே தேசம் சந்திக்கிறது இந்தச் சூழலில் வளர்ச்சி வளர்ச்சி என கூப்பாடு போடுவது ஏமாற்று வித்தையல்லவா? கொரோனா காலத்தில் வாழ் வாதாரம் இழந்த உழைப்பாளி மக்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய மோடி அரசு இந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி கார்ப்பரேட் நலன்களை பாதுகாக்க சாதாரண சாமானிய மக்கள் மீது கூடுதல் தாக்குதலை தொடுத்தது. வேலையின்மையோ கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. தனிநபர் வருவாய் குறைந்துவிட்டது. சந்தையில் நுகர்வோர் பொருட் கள் விற்பனையாகவில்லை, மக்கள் கையில் வாங்கும் சக்தி இல்லை, சிறு நடுத்தர தொழில்கள் பாதிப்பு, 14 கோடி பேர் வேலை இழப்பு, பெரும்பகுதி பெண்கள் வேலையில் இருந்து விரட்டப் பட்டனர். பல தொழிற்சாலைகள் மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கையை அப்பட்டமாக மேற்கொண்டன. கிராமப்புற சந்தையில் 75% தொழில்களில் விற்பனை குறைந்தது மொத்தத்தில் 116 நாடுகளில் உலக பசி தரவரிசை பட்டியலில் இந்தியா 101 இடத்தை பிடித்துள்ளது இதுதான் மோடியின் வளர்ச்சியா.
இந்துத்துவா அஜெண்டாவை திணிக்க முயற்சிக்கிறது. அரசி யல் சட்டம் நிர்ணயித்த உரிமை கள் மீறப்படுகின்றன. நாடாளு மன்ற ஜனநாயகம், மனித உரிமை கள் நசுக்கப்படுகின்றன. எதிர்க் கட்சித், தலைவர்கள், பத்திரிகை யாளர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமைப் போராளிகள் என பல ரும் தேசவிரோதிகள் - பயங்கர வாதிகள் என முத்திரை குத்தப் பட்டு சட்டவிரோத நடவடிக்கை கள் தடுப்பு மற்றும் தேசவிரோத சட்டங்களின் கீழ் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அரசு நிறுவனங்களான அமலாக்கப்பிரிவு, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணை யம் போன்றவை எதிரிகளை வேட்டையாட பயன்படுத்தப்படு கின்றன. இப்போது இல்லையேல் எப்போதும் இந்த சந்தர்ப்பம் கிடைக்காது என நிதி ஆயோக் வழங்கிய ஆலோசனையின் பேரில் பெரும் தேர்தல் நன்கொடை வழங்கிய கார்ப் பரேட்டுகளுக்கு விசுவாசம் காட்டி வருகிறது. இதனால்தான் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாதபோது தொழிலாளர் சட்டங்கள் 29ஐ நான்கு தொகுப்புகளாக மாற்றியது. விவாதம் இன்றி நிலைக்குழுவின் பரிசீலனைக்கு விடாமல் பொது இன்சூரன்ஸ் திருத்தச்சட்டம், அத்தியாவசிய பாதுகாப்பு சேவை சட்டத்தின் கீழ் பாது காப்பு சாதனங்கள் உற்பத்தி ஆலைகளில் மட்டுமல்ல அத்துடன் சம்பந்தப்பட்ட ஸ்டீல், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, துறைமுகம் போன்ற துறைகளிலும் வேலை நிறுத்தம் தடை செய்யப்படுகிறது. பென்சன் ஒழுங்காற்று ஆணை யம் சட்டத்திருத்தம் பென்சன் நிதியை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பது என தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் சவால்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே, தேசத்தை – மக்களை பாதுகாக்க இந்த தியாகிகள் தினத்தில் சபதமேற்போம்.