தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 327 கோடியே 69 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள 2,404 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (ஜன.29) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.