tamilnadu

img

சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

சென்னை, டிச. 16 - சென்னை பத்திரிகையாளர் மன்ற (பிரஸ் கிளப்) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகள் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2024 ஆம்  ஆண்டு தொடக்கத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் தலைமையில் சிறப்பு வழிகாட்டும் குழு அமைக்கப் பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதோடு பழைய உறுப்பினர்கள் புதுப்பிக்கப் பட்டனர். இதைத்தொடர்ந்து 25 ஆண்டு களுக்கு பிறகு டிசம்பர் 15 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் வழி காட்டுதலில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நீதிக்கான  கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற் கான அணி மற்றும் சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்டனர்.  காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதி வில் மொத்தம் உள்ள 1502 வாக்கு களில் 1371 வாக்குகள் பதிவாகின (91.27விழுக்காடு). மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரஸ் கிளப் தலைவராக சுரேஷ் வேத நாயகம், பொதுச்செய லாளராக மு. அசீப், இணைச் செய லாளராக நெல்சன், பொருளாளராக எஸ். மணிகண்டன், துணைத் தலை வர்களாக கு. சுந்தர பாரதி, மதன் ஆகி யோர் வெற்றி பெற்றனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தீக்கதிர் நிருபர் செ. கவாஸ்கர் (ஒற்றுமை அணி), ஸ்டாலின், பழனிவேல், அகிலா ஈஸ்வரன், விஜய  கோபால் ஆகியோரும் வெற்றி பெற்றனர். நீதிக்கான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர் களில் 10 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பதவியேற்பு  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் உடனடி யாக நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிதாக தேர்வாகியுள்ள நிர்வாகிகளுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல், நீண்ட இடைவெளிக்கு பின் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் புதிதாக தேர்வாகியுள்ள தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் சிபிஎம் மாநில செயற்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  தேர்தலை முன்னின்று நடத்திய மூத்த பத்திரிகையாளர்கள், தேர்தலில் பங்கேற்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கருத்துச் சுதந்திர அளவுகோலில் இந்தியா நாளுக்கு நாள் பின் தங்கிவரும் சூழலில், களத்தில் உண்மைகளைத் தேடும் பத்திரிகையாளர்களே அதன் நேரடியான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இப்படியான சூழலில், சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் முன்னிற்கும் என நம்புகிறோம். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அத்தகைய போராட்டங்களில் சிபிஎம் என்றும் உங்களோடு உறுதுணையாக நிற்கும்” என கே. பாலகிருஷ்ணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.