பேராவூரணியில் வழக்கறிஞர் சங்கம் சார்பில்
புற்றுநோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பேராவூரணி நீதி மன்ற வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நீதிமன்றம், பேராவூரணி வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பாக, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டு, பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, நீதிபதி அழ கேசன் தலைமையில் நடைபெற்றது. போட்டியில், வழக்கறிஞர்கள் ஒரு அணி யாகவும், நீதிமன்ற அலுவலர்கள் ஒரு அணி யாகவும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற நீதிமன்ற அலுவலர்கள் அணியின ருக்கு, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சீனி வாசன், செயலாளர் சிவேதி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் சுழற்கோப்பையை வழங்கி னர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன.