tamilnadu

img

உக்ரைனில் படித்த இந்திய மாணவர்களின் கல்விக் கடன் ரத்து பற்றி ஆய்வு

மதுரை,ஜூன் 8- உக்ரைனில் படித்த இந்திய மாணவர்க ளின் கல்விக் கடன் ரத்து பற்றி ஆய்வு  செய்து வருகிறோம் என்று சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கைக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் டாக்டர் பகவத் கரத்  பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்க ளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி நான் 08.03.2022 அன்று எழுதிய கடி தத்திற்கு ஒன்றிய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கரத் 25.05.2022 அன்று பதில் (DOF no. 14/04/2022 - CP- IF - 11)  அளித்துள்ளார்.  “வெளியுறவு அமைச்சக கணக்குப்படி 22,500 இந்தியர்கள், பெரும்பாலும் மாண வர்கள், 2022 பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைனில் இருந்து  மேலை நாடுகளுக்கு இடம் பெயர்ந்த இந்தியர்களுக்கு தங்கு மிடம், மருத்துவம், உணவு உள்ளிட்ட எல்லா உதவிகளையும் அரசு செய்து “ஆபரேசன் கங்கா”

திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட விமானங்கள் மூலம்  இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.  இன்னும் உக்ரைன் நிலைமைகள் தெளி வாகவில்லை. அங்கு நடந்தேறி வரும் நிகழ்வு களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு நிலைமை சீரடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக் கான வழிகளையும் பரிசீலிப்போம். இடைக் கால நடவடிக்கையாக, நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் மீது  உக்ரைன் மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து  உரித்தான மட்டங்க ளில் கலந்தாலோசனை செய்யுமாறு இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை (I.B.A) அறிவுறுத்தி யுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.  அமைச்சரின் பதிலுக்கு நன்றி கடிதத்தின் பதிலில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவ சரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக் ரைன் நிலைமை விரைவில் சீராக வேண்டும் என்று உளமாற விரும்பினாலும் அதை  கல்விக் கடன் ரத்து குறித்த பிரச்சனையோடு இணைக்காமல்,  ஏற்கெனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களு க்கு நிவாரணம் வழங்குகிற முடிவை உடன் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.