tamilnadu

img

இருமொழி கொள்கையால் மொழித் திணிப்பை வெல்வோம்”

மும்மொழிக் கொள்கையை ஏற்றே ஆக வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு  மிரட்டல் விடுத்து வரும் நிலையில், “எந்த  ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத் தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை யால் வெல்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகத் தாய்மொழி நாளையொட்டி, அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி  வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும்  மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போ தும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர்  திணிக்கத் துணிந்தாலும் அதனை “உள்ளத்தில் தமிழ்-  உலகிற்கு ஆங்கிலம்” என்ற பகுத்தறிவு வாய்ந்த இரு மொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம். தமிழ் வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.