சென்னை,டிச.25- பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் சென்னையில் இருந்து நெல்லை, நாகர் கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 12 ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுநாள் (13 ஆம் தேதி) நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதேபோல் எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடை கிறது. மறுநாள் (14 ஆம் தேதி) நாகர்கோவிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். நெல்லையில் இருந்து 16 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்க ளுக்கான முன்பதிவு டிசம்பர் 25 அன்று தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட சீட்டு கள் அனைத்தும் வேகமாக நிரம்பி காத்திருப்போர் பட்டிய லுக்கு வந்தது.