tamilnadu

img

பாஜக தலைவர் கே.சுரேந்திரன் சுருட்டியது ஹவாலா பணத்தில் ஒரு கோடி ரூபாய்

திருச்சூர், நவ. 4- கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் ஹவாலா பணத்தில் ஒரு கோடி ரூபாய் சுருட்டிக்கொண்ட தாக புதிய தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக அலுவலக முன்னாள் செயலாளர் திருர் சதீஷ் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலின் போது, கேரளத்துக்கு பா.ஜ., கொண்டு வந்த கறுப்பு  பணத்தில், ஒரு கோடி ரூபாயை,  மாநில தலைவர் கே.சுரேந்திரன் சுருட்டிக் கொண்டார். “பணம் கொண்டு வரும்போது கோழிக் கோட்டில் இருந்து கே.சுரேந்திரன் ஒரு கோடி ரூபாய் பெற்றதாக பணத்தை கடத்திய தர்மராஜன் கூறியுள்ளார். 35 லட்சம் ரூபாயை திருவனந்தபுரத்தில் உள்ள வி.வி.ராஜேஷிடம் ஒப்படைக்குமாறு தெரி விக்கப்பட்டிருந்தது,’’ என திருச்சூரில் செய்தியாளர்களிடம் சதீஷ் கூறினார். ஏப்ரல் 2, 2021 அன்று, ஆர்எஸ்எஸ் தலைவர் தர்மராஜன், திருச்சூர் மாவட்டக் குழு அலுவல கத்திற்கு 9 கோடி ரூபாயை ஆறு சாக்கு மூட்டைகளில் கொண்டு வந்த தை அவர் ஏற்கனவே வெளிப்படுத் தினார். எவ்வளவு பணம், எந்தெந்த  தொகுதிகளில் விநியோகிக்கப் பட்டது, யார் பெற்றுக்கொண்டார்கள் என்று சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இதைப் பயன் படுத்தி வாகனம், நிலம் வாங்கிய வர்களையும் தெரியும். மாவட்ட அலு வலக செயலாளருக்கு மாநில அலு வலகம், தலைவர்கள் மற்றும் மாவட்ட குழு தொடர்பான அனைத்து  பரிமாற்றங்களும் தெரியும். இந்த விவகாரங்கள் விசார ணைக் குழுவிடம் தெரிவிக்கப்படும். கொடகரையில் கொள்ளை நடந்தபோது, தர்மராஜன் முதலில் கே.சுரேந்திரனையும், அவரது மகனையும் அழைத்தார். ஹவாலா பண கடத்தல்காரர்கள் கட்சியின் மாநில தலைவரை தொடர்பு கொள்வது ஏன்? கே சுரேந்திரன் பற்றி  அனைவருக்கும் தெரியும். மரங்களை வெட்டி விற்ற வழக்கில் சுரேந்திரன் வயநாடு எஸ்டேட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஹவாலா பணப்பட்டுவாடா விவரங்களை வெளியிட்ட பிறகு சுரேந்திரன், மாவட்ட தலைவர் கே.கே.அனிஷ்குமார் ஆகியோர் தனிப்பட்ட தாக்குதலை நடத்தி வரு கின்றனர். மேலும் பல விவரங்கள் வெளியிடப்படும். அதைத் தடுக்க அவர்கள் இன்னும் சில பொய்க் கதைகளை தயாரித்து வைக்க வேண்டி இருக்கும். சிபிஎம் என்னை விலைக்கு வாங்கியதாக சொல்கிறார்கள். என்னை யாரும் வாங்க முடியாது. உண்மையைச் சொன்னதால் எவ்வ ளவு காலம் வாழ விடுவார் என்று  தெரியவில்லை. நான் இறந்தால் யார் பொறுப்பு என்று குடும்ப உறுப்பினர் களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சதீஷ் கூறினார்.

பொய்களை அம்பலப்படுத்திய புகைப்படம்

திரூர் சதீசன் வீட்டுக்கு தான் செல்லவில்லை என்று பாஜக நிர்வாகி சோபா சுரேந்திரன் கூறி யதும் பொய் என்பதை அம்பலப் படுத்தி ஷோபா சுரேந்திரன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் படத்தை சதீஷ் வெளியிட்டார். இது தனது வீட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் கூறியுள்ளார். சதீசனின் வீட்டிற்கு வரவில்லை என ஞாயி றன்று செய்தியாளர் சந்திப்பில் ஷோபா சுரேந்திரன் தெரிவித்துள் ள்ளார். ஷோபா சுரேந்திரனுக்கு தெரிந்தே ஹவாலா தகவல்களை வெளியிட்டதாக திரூர் சதீசன் கூறி யிருந்தார். நீதிமன்றத்தில் முழுமை யான விஷயங்களைச் சொல்வதாக ஷோபா, சுரேந்திரனிடம் கூறியதாக வும் தெரிந்ததை வெளிப்படுத்துங் கள் என்று அவர் தன்னிடம் தெரிவித்த தாகவும் கூறினார். அமைப்புத் தேர்தல் நடைபெறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதை வெளியிட்டால் மாநிலத் தலைவ ராக தான் வருவதற்கு வழி வகுக்கும் எனவும் ஷோபா சுரேந்திரன் கூறி னாராம். கே.சுரேந்திரனை விட சற்று  தெளிவான தலைவராக ஷோபா சுரேந்திரனை கட்சி ஊழியர்கள் பார்த்தனர். அந்தக் கருத்து தவறானது. தன்னை இழிவுபடுத்தி ஷோபா களத்துக்கு வந்ததால் ஷோபாவின் பெயரை சொல்ல நேர்ந்தது. சிபிஎம் தலைவர்கள் எனக்கு உதவுவதாக வும், மொய்தீனின் வீட்டில் சந்தித்த தாகவும் அவர் பொய் சொல்கிறார் என்றும் சதீஷ் கூறினார்.