“கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கும் செயல். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற பாஜகவின் கனவை, அவர்களின் தேர்தல் அறிக்கையே தகர்த்துவிடும்” என திமுக செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.