மதுரை, பிப்.2- இராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்கால சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற போலீஸ்காரர், பாஜக நிர்வாகி உள்பட 4 பேரை மதுரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூரைச் சேர்ந்தவர் அலெக் சாண்டர். இவர பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் பொறுப் பில் உள்ளார். அலெக்சாண்டர் பழங் கால சிலைகளை விற்க முயற்சி செய்வ தாக மதுரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தக வல் கிடைத்தது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் கண் காணிப்பாளர் மலைச்சாமி, ஆய்வா ளர்கள் இளங்கோ, சத்யபிரபா, கவிதா, பிரேமா சாந்தகுமாரி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. இதையடுத்து தனிப்படை யினர் பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டச்செயலாளர் அலெக்சாண் டரை புதன்கிழமையன்ற பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். விசார ணையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காவலர் இளங்குமரன் மற்றும் கருப்ப சாமி ஆகியோர் தன்னிடம் 7 பழங் கால சிலைகளை விற்பனை செய்வ தற்காக கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தனிப்படையினர்,
காவலர் இளங்குமரன், கருப்பசாமி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மலைக்கிரா மத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சிலை கள் விற்பனைக்கு இருப்பதாக அறி ந்து, காவலர் இளங்குமரன், திண்டுக் கல் ஆயுதப்படைக் காவலர் நாக நரேந்திரன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த கணே சன் மற்றும் கருப்பசாமி ஆகிய நால்வரும், அந்த கிராமத்துக்குச் சென்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை என்று கூறி 7 சிலை களையும் கைப்பற்றி கொண்டு வந்த தும், இந்த சிலைகளை அலெக்சாண் டர் மூலமாக ரூ.5 கோடிக்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதை யடுத்து வேறொரு வழக்கில் தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள அருப் புக்கோட்டை காவலர் இளங்குமரன் (44), விருதுநகர் கூரைக்குண்டுவைச் சேர்ந்த கருப்பசாமி(35), பாஜக சிறுபான்மை பிரிவு இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் அலெக்சாண் டர்(52), திண்டுக்கல் ஆயுதப்படைக் காவலர் நாக நரேந்திரன் ஆகிய நால்வ ரையும் கைது செய்தனர். தலைமறைவான இராமநாத புரத்தைச் சேர்ந்த ராஜேஷ், விருது நகரைச் சேர்ந்த கணேசன் ஆகிய இரு வரையும் தேடி வருகின்றனர். இராம நாதபுரம் மாவட்டம் சாத்தளை அய்ய னார் கோயில் அருகே உள்ள கால்வா யில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு நடராஜர் சிலைகள், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை உள்ளிட்ட 7 சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.