tamilnadu

img

சிபிஎம் மாநில மாநாட்டிற்கு உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய பள்ளி மாணவர், மாணவியர்

மதுரை, மார்ச் 20-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  23 ஆவது மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30,31, ஏப்ரல் 1 ஆகிய தேதி களில் நடைபெறுகிறது. மாநாட்டை சிறப்பாக நடத்து வதற்கான பணியில் கட்சித்தோழர்கள் அன்றாடம் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி மாநாட்டிற்கு மக்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் மனமு வந்து நிதி வழங்கி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக டால்பின் எலக்ட் (சிபிஎஸ்இ) பள்ளியில்  8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் லோகசங்கர் லட்சுமணன், பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதி மேல்நிலைப்பள்ளி யில் 6 ஆம் வகுப்பு படிக்கும் ஆர்.தீபிகா ஆகியோர் தாங்கள் உண்டியல் மூலம் சேமித்த பணம்  1420 ரூபாயை மாநில மாநாட்டு நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்து வழங்கினர்.  கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரு மான சு.வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம், மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகி யோரிடம் மாணவர், மாணவியர் நிதியை வழங்கினர். இவர்களது தந்தை  இருவரும் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தில் செயல் பட்டு வருகின்றனர். இந்த மாணவ, மாண வியர் இருவரும் சிலம்ப போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று, பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர்.  நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு சால்வை அணிவித்து, பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்த னர்.