மதுரை, ஜன.15 - பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.14 அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்கு பின்னர் தமிழக வணிக வரி - பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், மாநகர காவல் ஆணையர் லோக நாதன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். ஆன்-லைன் மூலமாக தேர்வு செய்யப் பட்ட 500 மாடுபிடி வீரர்களும், 11 சுற்று களாக அனுமதிக்கப்பட்ட தோடு 836 காளைகளும் அவிழ்க்கப்பட்டன. 10 சுற்றுகளிலும் சிறப்பாக காளை களை பிடித்த, சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிச்சுற்றில் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றின் போது, பரவலாக மழை பெய்த நிலை யிலும் போட்டி விறுவிறுப்பாக நடை பெற்றது. போட்டியில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி, வீரர்களை மிரட்டி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளிச் சென்றன. இதேபோன்று மிரட்டிய காளைகளை யும் மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளையும் பெற்றுச் சென்றனர். மலையாண்டி என்பவரின் காளை, வீரர்களை நெருங்க விடாமல் கள மாடியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சார்பில் முதல் பரிசாக டிராக்டர் வாகனமும், மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டன. இரண்டாவது பரிசாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த ஜி.ஆர்.கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு பைக் பரிசு வழங்கப்பட்டது. போட்டியின் போது திறம்பட விளை யாடி 19 காளைகளை அடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கு, முதல் பரிசாக துணை முதலமைச்சர் சார்பில் நிசான் எலெக்ட்ரிக் கார் மற்றும் மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்று டன் கூடிய கறவை பசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 ஆவது மாடு பிடி வீரருக்கு பைக் பரிசு வழங்கப் பட்டது. இந்த போட்டியின் போது 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காளை களை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர் களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியின் முடிவில் சிறந்த 2 மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு கோப்பை கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்று களை அமைச்சர்கள் மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் வழங்கினர். இதில் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்க ளவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்க டேசன், மு.பூமிநாதன், கோ.தளபதி, மற்றும் துணை மேயர் டி.நாகராஜன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒருவர் பலி மாடு குத்தியதில், காவல்துறை யினர், செய்தியாளர், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமை யாளர்கள் உள்பட 46 பேர் காய மடைந்தனர். 12 பேர் மேல் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியின் போது மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் குமார் ஜல்லிக்கட்டு காளை முட்டிய தில் பலத்த காயம் அடைந்தார். சிகிச் சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்ககு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.