tamilnadu

img

தேனி மாவட்ட செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா

தேனி மாவட்ட செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா 

தேனி, ஜூன் 15-  மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் செந்தொண்டர் பேரணி நடைபெற்றது.  இந்த பேரணியில் கலந்து கொண்ட தேனி மாவட்டத் தைச் சேர்ந்த செந்தொண் டர்களுக்கு வைகை அணை யில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செந்தொண்டர் பொறுப்பா ளர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். செந் தொண்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்  கண்ணன் சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், டி.கண் ணன், ஜி.எம்.நாகராஜன், சு.வெண்மணி, இடைக் கமிட்டி செயலாளர்கள் கே.ஆர்.லெனின், இ.தர்மர், சி.முனீஸ்வரன், என்.அம்சமணி, எஸ்.ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் நன்றி கூறினார்.