tamilnadu

img

பாராட்டு விழா, பொதுக்கூட்டம்

பாராட்டு விழா, பொதுக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 22-  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் 59 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி 15 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியதால் 45 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க வழிகாட்டியாகவும், தலைமை தாங்கி பல போராட்டங்கள் நடத்திய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில தலைமைக்கும் மாவட்ட தலைமைக்கும் மற்றும் ஒன்றிய தலைமைக்கும்  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க முத்தரசநல்லூர், முருங்கைப்பேட்டை கிளைகள் சார்பில் புதனன்று பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஜீயபுரம் கடைவீதியில் நடந்தது. விழாவிற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். சித்ரா, கவிதா, வகிதா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அமிர்த லிங்கம், மாநில செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் மாவட்ட செயலாளர் வெற்றி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்டப் பொருளாளர் இளங்கோவன், ஒன்றியத் தலைவர் நடராஜன், ஒன்றியச் செயலாளர் ஜோதி முருகன், ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.