சென்னை, ஆக.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக என். பாண்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தீக்க திர் ஆசிரியராக உள்ள மதுக்கூர் ராம லிங்கம் சிறப்பாசிரியராகவும் தற்போது மதுரை பதிப்பின் பொறுப்பாசிரியராக உள்ள எஸ்.பி.ரஜேந்திரன் ஆசிரியராக வும் நியமிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம் ஆகஸ்ட் 11,12 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு மாவட் டம் சிங்கபெருமாள்கோவிலில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பி. சம்பத். உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநி லக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இடைக்கால ஸ்தாபன அறிக்கை இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக் கால ஸ்தாபன பரிசீலனை அறிக்கை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக என்.பாண்டி தேர்வு செய்யப்பட்டார். மாநில செயற்குழுவிற்கு அழைப்பாளர்களாக டி.ரவீந்திரன், செ.முத்துக்கண்ணன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநி லக்குழு உறுப்பினர்களாக கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை சண்முக‘ராஜா, மதுரை புறநகர் மாவட் டச்செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநி லக்குழு அழைப்பாளர்களாக ஏ.சிங்கார வேலன், இரா.சிசுபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீக்கதிர் நாளித ழின் சிறப்பாசிரியராக மதுக்கூர் ராம லிங்கம், ஆசிரியராக எஸ்.பி.ராஜேந்தி ரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.