tamilnadu

img

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல், ஜூலை 20- நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீ சார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி தனது பதவிக்காலத்தில் குறிப்பாக 2016 மே 23 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும், வரு மானத்துக்கு அதிகமாக 4.85 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.  இதை தொடர்ந்து, நாமக்கல் பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் அளித்த புகாரின்படி, நாமக் கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவ ரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

தொடர்ந்து கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தங்கமணிக்கு சொந்த மான இடங்களில் லஞ்ச  ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். தங்க மணிக்கு தொடர்புடைய சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 69 இடங் களில் ஒரே நேரத்தில் சோத னை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி ரொக்க பணம், 1.130 கிலோ தங்க நகை கள், 40 கிலோ வெள்ளி பொருட்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்தி ரங்கள், பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்க மணி அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக  சேர்த்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய் திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ள னர். அதன்தொடர்ச்சியாக புதனன்று  பள்ளிபாளையம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீ சார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, நடந்த சோத னையின் போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவ ணங்களின் படி சொத்துக்கள் உள்ளதா என்பதை உறுதி  செய்வதற்காக போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளதாக கூறப்படுகிறது.