அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க 25 ஆவது அமைப்பு தின விழா
மயிலாடுதுறை, மே 21 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 25 ஆவது அமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில், மயிலாடு துறை சிஐடியு அலுவலகத்தில் அமைப்பின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கன் வாடி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.லதா தலை மையில், சங்க கொடி யினை மாவட்டத் தலைவர் பி.சகிலாபானு ஏற்றினார். மாவட்ட பொருளாளர் அஜிதா, மாவட்ட நிர்வாகிகள் வள்ளியம்மை, சுஜாதா கலந்து கொண்ட னர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமானுஜம், மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கணே சன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரி யப்பன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தில்லியில் கடந்த வாரம் மாநில அளவில் நடந்த ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு திருச்சி கே.கே.நகர் சாய் ஜி பயிற்சி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ரோல் பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய் ஜி ரோல்பால் சங்க செயலாளர் மதுமிதா உட்பட பலர் பாராட்டினர்.