tamilnadu

அங்கன்வாடி ஊழியர் சம்மேளன அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு

மதுரை, செப்.16-  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் -உதவியாளர் சம்மேளனத்தின் 10 ஆவது அகில இந்திய மாநாடு டிசம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில்  உள்ள ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான  வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் செப்டம்பர் 16 வெள்ளியன்று மதுரை  வடக்கு மாசி வீதியில் உள்ள தருமை ஆதீனம் ஸ்ரீசொக்க நாதர் திருமண மண்டபத்தில் மாநிலத்  தலைவர் எஸ்.ரத்தினமாலா தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன், சிஐடியு மாநில பொருளா ளர் மாலதி சிட்டிபாபு, சங்கத் தின் மாநிலப் பொதுச் செய லாளர் டி.டெய்சி, சிஐடியு மாநிலச் செயலாளர் கே. சி.கோபிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், செயல் தலைவராக எஸ். ரத்தின மாலா, செயலாளராக டி.டெய்சி, பொருளாளராக எஸ்.தேவமணி மற்றும் சிஐடியு  மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டி பாபு, மாநிலச் செயலா ளர் கே. சி. கோபிக்குமார், துணைப் பொதுச் செய லாளர்கள் எஸ். கண்ணன், கே.திருச்செல்வம், வி.குமார், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், மாநகராட்சி துணை மேயர் டி. நாக ராஜன் உள்ளிட்ட 336 பேர் கொண்ட மாநாட்டு வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. 

;