தஞ்சாவூர், பிப்.19 - தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த நடிகர் நாசர், மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றை மைய மாக கொண்டு, இயக்குநர் யோகேந்திரன் இயக்கிய திரைப்படம் ‘மேதகு’. அதன் இரண்டாம் பாகமான, மேதகு 2 திரைப்படம் சூட்டிங், தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நாசர், சனிக்கிழமை காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, மாநக ராட்சி கமிஷனர் சரவணகுமாரை சந்தித்த நாசர், பழ.நெடு மாறனின் ‘காலத்தை வென்ற காவிய நட்பு’ புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து, கமிஷனர் சரவண குமாரின் செயல்பாடுகளை பாராட்டி, உங்களின் பணிகள் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்றார். பிறகு, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலையை வணங்கி மரியாதை செலுத்தினார். அப்போது கமிஷனர் சரவ ணகுமார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்த னர். இதுகுறித்து நாசரின் உதவியாளர் கூறுகையில், தஞ்சா வூர் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமாரின் செயல்பாடுகள், மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றியது போன்ற செயல்கள் குறித்து அறிந்ததால், அவரை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும் என்பதற்காக நேரில் சென்று பாராட்டினார் என்றார்.