கேரள சுகாதாரத் துறையின் சாதனைகளும் விருதுகளும்
கோவிட்டின் இரண்டாம் கட்ட பரவல் தொடங்கிய வேளையில் இரண்டாம் பினராயி விஜயன் அரசு பொறுப்பேற்றது. கோவிட் தடுப்பு நடவடிக்கைக்காக நாம் செய்த ஏற்பாடுகளும் செயல்பாடுகளும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. கோவிட்டுடன் நிபா, குரங்கு காய்ச்சல், ஸிகா போன்ற தொற்றுநோய்களும் தொற்றா நோய்களின் பாதிப்புகளும் பொதுமக்களின் நல்வாழ்வுத்துறையில் பெரும் சவாலை ஏற்படுத்தின. அந்த சவால்களை திறனுடன் கையாண்டு பெரும் முன்னேற்றம் காண கேரள சுகாதாரத்துறையால் சாத்தியமானது. சுகாதாரத்துறையில் காலத்துக்கு ஏற்ற பெரும் மாற்றங்கள் ஏற்படுத்த அரசால் முடிந்தது. 30 லட்சம் பேருக்கு சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் கிஸ்பியின் நிதி உதவியுடன் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றன. மகளிர் குழந்தை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சாதனைகளுக்காக தேசிய- சர்வதேசிய அளவில் 28க்கும் மேற்பட்ட விருதுகளும் பரிசுகளும் கிடைத்துள்ளன. நாட்டிலேயே மிகவும் அதிகமான கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் மாநிலம் கேரளமாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் பேருக்கு மொத்தம் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான சிகிச்சை கிடைத்துள்ளது.
இதற்காக வழங்கப்படும் ‘ ஆரோக்கிய மந்தன்’ விருது தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக கேரளத்துக்கு கிடைத்து வருகிறது. நிதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி நோயின் துவக்க அறிகுறிகளை கண்டறிந்து அவற்றை கையாள்வதில் முதலிடத்தில் இருப்பதுடன் முன்னேறிக்கொண்டிருக்கும் மாநிலம் கேரளமாகும். தனியார்துறையில் ரூ.40 லட்சத்துக்குமேல் செலவாகும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த கால அளவில் துவக்கப்பட்டுள்ளது. இலவசமாகவோ அல்லது மிக குறைந்த கட்டணத்திலோ இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2022 பிப்ரவரியில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியிலும் நடந்தது. அடுத்ததாக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை துவக்கப்படும். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரசுத்துறையில் முதன்முறையாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை ஆர்சிசியிலும் (மண்டல புற்றுநோய் மையம் - திருவனந்தபுரம்) எம்சிசியிலும் (மலப்புறம் புற்றுநோய் மையம்) எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட அளவிலான மருத்துவமமைனயில் இதய அறுவை சிகிச்சையும் திறக்காமலே வால்வ் மாற்றும் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோய்க்கான மருந்துகள் மிகவும் குறைந்த விலையில் வழங்கும் லாப நோக்கமற்ற ‘காருண்யா ஸ்பர்சம்’ மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இதுவரை சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 202 சுகாதார நிறுவனங்களுக்கு தேசிய தரத்துக்கான விருதுகள் கிடைத்துள்ளன. 12 மருத்துவமனைகளுக்கு தேசிய சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. மாநிலத்தில் இ.ஹெல்த் திட்டம் இதுவரை 684 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இ.ஹெல்த் அமைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோந்நி, இடுக்கி ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டன. வரலாற்றில் முதன்முறையாக அரசுத்துறையில் 1020 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நர்சிங் படிப்புக்கான இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அரசுத்துறையில் புதிதாக 8 நர்சிங் கல்லூரிகளும் ஸிமெட்டின் கீழ் 7 நர்சிங் கல்லூரிகளும் துவக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் கேத் லேப் இந்த அரசின் காலகட்டத்தில் மருத்துவக் கல்வியில் மிக முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக கேரளத்தில் மருத்துவக் கல்லூரியும் பல்மருத்துவக் கல்லூரியும் தேசிய பட்டியலில் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றன. சிகிச்சையிலும் பயிற்சியிலும் மருத்துவக் கல்லூரிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது இதே காலத்தில்தான். அதில் குறிப்பிடத்தக்கது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் நியூரோ இன்டர்வென்சன் மையமாகும்.
மாரடைப்புக்கான உடனடி சிகிச்சை அளித்து குணப்படுத்த உதவும் கேத் லேப் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இலவசமாக டயாலிசிஸ் மருத்துவனைக்கு வராமலே நோயாளிகளுக்கு வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்ய உதவும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டம் 14 மாவட்டங்களிலும் துவக்கப்பட்டது. பக்கவாதத்திற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் ஏற்பாடு 12 மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையை ஹெல்த் ஹப்பாக மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது. சிகிச்சை வசதிகளுடன் நோய் வராமல் தடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க ஏராளமான திட்டங்கள் இந்த காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டன. இன்றைய சுகாதாரத் தேவைகளையும் நாளைய தேவைகளையும் முன்னிறுத்தி சுகாதாரத்துறை திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இவற்றை மேலும் அதிகரிக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை.