திருச்சுழி, செப்.26- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள அகத்தாகுளம் பகுதியி லுள்ள விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் உணவுப் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை மூலம் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திற்குட்பட்ட அகத்தாகுளம் வரு வாய் கிராமத்திற்கு உட்பட்ட அகத்தா குளம், முத்தனேரி, குருந்தங்குளம் மற்றும் நத்தகுளம் ஆகிய கிராமங் களில் பாரம்பரியமாக கண்மாய் மற்றும் கிணற்றுப் பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் உணவு பூங்கா அமைத்திடும் நோக்கில், விவசாயிகள், விவசாயத்தை சார்ந்து இருக்கக்கூடிய விவசாயத் தொழிலாளர்கள், நில உரிமையாளர்களிடம் அனுமதி பெறா மல் விளைநிலங்களை கையகப் படுத்திட அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்நிலையில், சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் உணவுப் பூங்கா அமைந்தால் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், நில உரி மையாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இந்நிலங்களில் தொழிற்சாலைகள் அமைந்தால், அதிலிருந்து வெளி யிடப்படும் கழிவுகளால் நிலம், நீர், காற்று மாசுபாடுகள் ஏற்பட்டு இப்பகுதி யில் தீராத நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. மேலும் ராட்சத போர்கள் போடப்பட்டு இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவ சாயம் பாதிக்கப்படும். மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படும். அதனால், கால்நடை வளர்ப்பு தொழிலும் பாதிக்கப்படும். எனவே, அகத்தாகுளம் வருவாய் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா மற்றும் உணவுப் பூங்கா அமைப்ப தற்கு நிலம் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும் இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு வட்டச் செய லாளர் ஆர்.பெருமாள் தலைமை யேற்றார். வட்டத் தலைவர் எம்.அயூப்கான், கிளைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்டத் தலை வர் அ.விஜயமுருகன் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் வி.முருகன் பேசினார். முடிவில் மாநிலத் தலைவர் பெ.சண்மு கம் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தும். ஆனால், இழப்பீடு தராது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக போராடியது.
அதன் பிறகே நிலங்களை கை யகப்படுத்தினால், நியாயமான இழப்பீடு, மறுகுடியமர்வு, மறுவாழ்வு ஆகியவற்றை வழங்கும் வகையில் 2013 இல் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழக அரசு, தற்போதும் 1997 தொழிற்சாலை சட்டப்படி விவசாய நிலங்களை கையகப்படுத்தி வரு கின்றனர். பரந்தூர், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் இச்சட்டப்படியே நிலங்களை கையகப்படுத்த முயற்சிக் கின்றனர். மேலும், உணவுப் பூங்கா, தொழிற்பூங்கா அமைக்கப்பட்டால், அங்கு என்னென்ன தொழிற்சாலை கள் அமைக்கப்படும் என்ற வெளிப் படையான விபரங்கள் அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் சிப்காட் அமைக்க 50 சதவீத அரசு நிலங்களும், 50 சதவீதம் நிலங்களும் கையகப்படுத்தப்படும். ஆனால், அகத்தாகுளம் பகுதி உணவுப் பூங்காவிற்கு 900 ஏக்கர் அளவு பட்டா விளை நிலங்களையும், சுமார் 100 ஏக்கர் அரசு நிலங்களையும் பயன்படுத்த உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளனர்.
அதிலும், கரும்பு, வாழை, தென்னை, கத்தரி, வெங்காயம், நிலக் கடலை போன்ற பயிர்கள் பயிரிடப்படும் விளைநிலத்திற்கு ஏக்கருக்கு வெறும் ரூ.79,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. எனவே, விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பூங்கா, உணவுப் பூங்காக்கள் அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அதே வேளை, இப்பூங்காக்களை தமிழ் நாட்டில் தரிசாக உள்ள 70 லட்சம் ஏக்கர் நிலத்தில் அமைத்திட வேண்டும் என்று கூறினார். மேலும் இப்போராட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் குமராண்டி, சிபிஎம் வட்டச் செயலாளர் மார்கண்டன், சுரேஷ், பரமசிவம், திருமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.