விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் சு.வெங்கடேசன் பங்கேற்றார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி வைத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உரையாற்றினார்.
உடன் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் டி.ரவீந்திரன், மாவட்ட விவசாய சங்க தலைவர்கள் ராஜேந்திரன், இளங்கோ சிபிஎம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள் இரா.விஜயராஜன், சி.ராமகிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் பூமிநாதன் மற்றும் சிபிஐ மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.