கம்யூனிஸ்ட் கட்சி அதன் கருத்தை வலுவாக முன்வைக்கும் பத்திரிகை மூலம் தனது அரசியல் எதிரிகள் வழிநடத்தும் இயக்கங்கள் உட்பட அனைத்து இயக்கங்களுடனும், நெருங்கிய தொடர்பில் உள்ளது. மார்க்ஸ்/ஏங்கெல்ஸ்/லெனின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு என்பது இடைவிடாத தொடர்ச்சியான சமரசமற்ற கருத்துகளின் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்ட வரலாறாகவே உள்ளது. இந்த கருத்துப் போராட்டங்களில் உருவான அவர்களின் எழுத்துக்களும் அவர்களின் மகத்தான படைப்புகளான மூலதனம்/ ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்/பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் போன்ற எண்ணற்ற படைப்புகளும் இணைந்துதான் மார்க்சியமும் பின்னர் அதன் விரிவாக்கம் லெனினியமும் தோன்ற வழிவகுத்தன.
- இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் -