tamilnadu

பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முன்னெடுக்கும் புதிய தோட்டக்கலைப் புரட்சி

பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முன்னெடுக்கும் புதிய தோட்டக்கலைப் புரட்சி

பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி நிலை யம் கடந்த 1989ஆம் ஆண்டு துவங்கப்பட்டு புதிய தோட்டக் கலை தொழில்நுட்பங்கள் உருவாக்கம், புதிய ரகங்கள் வெளியிடுவது, அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் (All India Co-ordinated Research Project) இணை தேர்வு மைய மாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வரு கிறது.  தற்போது நமது தோட்டக்கலை பயிர் சாகுபடி சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்களாக பருவநிலை மாற்று பிரச்ச னைகள் (Climate change issues) மற்றும் விளைபொருட்களுக்கு கட்டு படியான விலை கிடைக்காத நடை முறை சூழல் உள்ளன. இதனால் சிறு குறு விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாயத் தொழிலாளர்கள் கடுமை யாக பொருளாதார இழப்புகள் மற்றும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய நடைமுறைச் சூழலில் விவ சாயிகளின் வருமானத்தை பெருக்க வும், குறைந்த செலவில் வேளாண் உற்பத்திப் பணிகளை தொடரவும், இடைத்தரகர்களை தவிர்த்து நேரடி யாக நுகர்வோர் மற்றும் உற்பத்தி நிறு வனங்களுக்கு தங்கள் தோட்டக்கலை பயிர்கள் விற்பனை செய்து அதிக லாபம் பெறும் நோக்கில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பல்வேறு ஆக்கப் பூர்வமான விரிவாக்க முயற்சிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி தோட்டக் கலை பயிர் சாகுபடி பெருக்கம் மற்றும் அதில் அதிகப்படியான பண்ணை மகளிர் (Farm Women) குறிப்பாக பழங்குடியினரை சேர்த்து ஒரு உள்ள டக்கிய வளர்ச்சியை (Inclusive growth) உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரப்பர் உற்பத்தியில்  பண்ணை மகளிருக்கு பயிற்சி கடந்த சில மாதங்களாக விஞ்ஞான ரீதியாக ரப்பர் பால் வெட்டும் பயிற்சிகள் பண்ணை மகளிருக்கு குறிப்பாக பழங்குடியின பெண்களுக்கு ரப்பர் வாரியம் மற்றும் கன்னியாகுமரி ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனம், ஊரக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இரட்ச ணிய சேனை சமூக நல மற்றும் மேம்பாட்டு திட்டம் ஆகியவை இணைந்து விஞ்ஞான ரீதியான பயிற்சிகள் ஒரு வார கால அளவிற்கு வழங்கப்பட்டு, பின்பு தேர்வுகள் நடத்தப்பட்டு ரப்பர் வாரியத்தின் வாயி லாக ஒன்றிய அரசின் சான்றிதழும் வழங்கப்பட்டது.  இதன் வாயிலாக பண்ணை மகளிர் தங்களின் ரப்பர் தோட்டத்திலும், பிறர் தோட்டங்க ளிலும் ரப்பர் பால் வெட்டி நாள்தோ றும் வருமானம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது சுய உதவிக் குழுக்களாக செயல்படும் மகளிர் குழுக்கள் புதிய துவக்க நிறுவனங்கள் (Startups) துவங்கி தங்கள் ஆக்கப்பூர்வமான சிந்த னைகளை தொழில்களாக உருமாற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியில் பயிற்சி தற்போது நமது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயற்கை வேளாண் பொருட்களுக்கு நல்ல வரவேற்பும், சந்தை வாய்ப்புகளும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பழங்குடி யின விவசாயிகள், பண்ணை மகளிர், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் வானிலை தக வல்களை திறன் கைபேசி செயலிகள் வாயிலாக பெறும் நடைமுறைகள், இயற்கை வேளாண் விளைபொ ருட்களை மதிப்புக் கூட்டி இணைய தளங்கள் குறிப்பாக ஒன்றிய அரசின் “E-NAM (தேசிய வேளாண் சந்தை)”  வாயிலாக தங்களின் விளைபொருட்க ளை நேரடியாக நுகர்வோர், பெரு நிறுவனங்கள் மற்றும் அரசின் பல துறைகளின் விற்பனை செய்ய வும் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங் கப்பட்டு, அவர்கள் இயற்கை தோட்டக் கலை பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை வாயிலாக தொழில்முனை வோராக உருவாக்கவும் ஆக்கப்பூர்வ மான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. புதிய ஊடுபயிர்  சாகுபடி அறிமுகம் தற்போது பெருவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வரும் தோட்டக்கலை பயிர்களான ரப்பர், தென்னை மற்றும் பாக்கில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக் கில் புதியதாக ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விரிவாக்கப் பயிற்சிகளை மோண்டலிஸ் (இந்தியா) நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பயனாக சுமார் 68500 கோகோ கன்றுகள் இலவசமாக விவசாயி களுக்கு குறிப்பாக பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் முந்திரி மற்றும் கோகோ இயக்கம் வாயிலாக நடை முறைப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய தோட்டக்கலை செயல்திட்டத்தின் வாயிலாக இனி வரும் மூன்று ஆண்டு முதல் 35 ஆண்டுகள் வரை கோகோ சாகுபடி செய்யும் விவசாயிகள் இரட்டிப் பான வேளாண் வருமானத்தை பெறு வதுடன் குறைந்த தண்ணீரில் அதிகளவு பயிர்களையும் சாகுபடி செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவ னத்தின் விரிவாக்கப் பணிகள் சமூக தளத்தில் செயல்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சி நிறு வனங்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தன்னார்வத் தொண்டு நிறு வனங்களை இணைத்து சமுதாயத்தி லும், பொருளாதாரத்திலும் பின்தங்கி யுள்ள பழங்குடியினர், பண்ணை மகளிர், விவசாயத் தொழிலாளர்களை ஆக்கப்பூர்வமான முறையில் இ ணைத்து புதிய தோட்டக்கலை பயிர்கள் அறிமுகம், மதிப்புக் கூட்டல் மற்றும் விற்பனை பயிற்சிகளை வழங்கி இனி வரும் காலங்களில் பருவநிலைமாற்று பிரச்சனைகளுக்கான விஞ்ஞான ரீதியான தீர்வுகளுடன் ஒரு மாற்று வளர்ச்சி மாதிரி (Alternative Development Plan) வாயிலாக ஒரு புதிய தோட்டக்கலைப் புரட்சியை உரு வாக்கிச் செய்துள்ளது. இனி வரும்  காலங்களில் வேளாண் துறையில் பெண்கள் மிகப் பெரிய அளவில் தங்களது பங்களிப்பை ஆக்கப்பூர்வ மான முறையில் வழங்க இப் புதிய விரிவாக்க முயற்சிகள் துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை. கட்டுரையாளர் : இணைப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்). தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம். பேச்சிப்பாறை – 629101. கன்னியாகுமரி