உழைக்கும் வர்க்கத்திற்கா கவும், சமுதாயப் புரட்சிக்காகவும் பல பத்தாண்டுக் காலம் போராடி தமது புரட்சிகர சித்தாந்தத்துடன் அத்தனை கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்த பல தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளனர். இவர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி பெருமைப்படு கிறது. அதேசமயம், தோழர் சுந்தரய்யா வுக்கு இவர்கள் அனைவரையும்விட ஒரு தனிச் சிறப்பு உண்டு. மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தில் அசையா உறுதி கொண்டவராகவும், ஒரு நிரந்தரப் புரட்சியாளருக்குரிய அத்தனை அம்சங்களும் கொண்டவராகவும் விளங்கிய மக்கள் தலைவர் அவர். பல்லாயிரக்கணக்கான மக்களை தேச சுதந்திரத்திற்காகவும், சோஷலிசத்திற்காகவும்- இறுதி இலட்சியமாகிய கம்யூனிச சமுதாயத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் சுந்தரய்யா. உண்மையான கம்யூனிஸ்ட் புரட்சியாளர்க்குரிய சுந்தரய்யாவின் வாழ்க்கை முறைகளை நாம் சாதாரணமாக மற்றவர்களிடம் பார்க்க முடிவதில்லை. ஆனால், அவை சமுதாயப் புரட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்கிற கம்யூனிஸ்ட்டுகளுக்கு தவறாமல் இருக்க வேண்டியவையாகும். தோழர் சுந்தரய்யா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பிறகு தமது சொத்துக்கள் முழுவதையும் கட்சிக்கு வழங்கிவிட்டார். அவர் இறந்தபோது அவருக்கு இருந்த ஒரே சொத்து கட்சி மட்டுமே! முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவத்துக்கு அவர் அடி பணிந்ததில்லை. 1937-ல் சுந்தரய்யாவைப் பார்த்தவர்கள்கூட இன்று அவர் பெரிய தேசத் தலைவராக உயர்ந்த பிறகும் அதே எளிமையான சுந்தரய்யாவையே பார்க்கிறார்கள். அவர் மக்களை நேசித்தார். மக்களிடையே இருப்பதுதான் அவருக்கு மகிழ்ச்சி. அவரது சித்தாந்தம் மக்களிடமிருந்து கற்றுக்கொள்வது. அவ்விதமாகவே அவர் மார்க்சியத் தத்துவத்தை நடைமுறையில் பின்பற்றினார். தமது 55 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கையில் அவரைச் சந்தித்த ஒவ்வொருவரின் இதயத்திலும் அவர் இடம் பெற்றிருக்கிறார். கஷ்டப்படும் மக்களுக்காகப் பாடுபட்ட, சுயநலமற்ற செயல் வீரராக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வார்கள். அவர் நம் முன் இப்போது இல்லை. ஆனால், புரட்சிக்காக அவர் ஆற்றிய பணிகள், சுயநலமற்ற சேவை எல்லாம் அதற்காகப் பணியாற்றுகிற நம் அனைவருக்கும் உத்வேகமூட்டும்! - ஹரிகிஷன் சிங் சுர்ஜித்