tamilnadu

img

வாய்ப்பு வாசல்

56 விஞ்ஞானிகள் பணியிடங்கள்

ஆய்வுப்பணிக்காக பல்வேறு நிறு வனங்களில் 56 விஞ்ஞானி கள் பணி அமர்த்தப்படவிருக்கிறார்கள்.  இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதற்கான தேர்வு நடை முறையை நிறைவு செய்யத் திட்டமிட்டுள் ளனர். தனித்தனியாக அறிவிக்கைகள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு கல் வித்தகுதிகள் என்பதால் விண்ணப் பிக்க விரும்புபவர்கள் அறிவிக்கைக ளைத் தெளிவாகப் படித்துக் கொள்வது அவசியமாகும்.

சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆய்வுக்கான கவுன்சில்)

ஆய்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் விஞ்ஞானிகளாகப் பணியாற்றுவ தற்கான வாய்ப்பு  சிஎஸ்ஐஆர் (CSIR - Council of Scientific & Industrial Research) மூலமாக வந்திருக்கிறது. இதற்கான அறிவிக்கையையும் வெளி யிட்டிருக்கிறார்கள். 11 பணியிடங்கள் இதில் நிரப்பப்படவுள்ளது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி யான கல்வித்தகுதிகள் மற்றும் வயது  வரம்பு தரப்பட்டிருக்கிறது.  முழுமையான அறிவிக்கை, கூடு தல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்ப தற்கான இணைப்பு ஆகியவற்றிற்கு https://rab.csir.res.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப் பம் நிரப்புவதற்கான கடைசித் தேதி : மார்ச் 22, 2025 ஆகும்.

சுற்றுச்சூழல் துறை

சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் தட்ப வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றிற் கான ஒன்றிய அமைச்சகம் 33 விஞ்ஞா னிகள் பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை வெளி யிட்டிருக்கிறது.  தாவரவியல், விலங்கியல், தேசிய அருங்காட்சியகம், சுற்றுச்சூழல், காடு கள் மற்றும் தட்பவெப்பநிலை ஆகிய துறைகளில் விஞ்ஞானிகளாகப் பணி யாற்ற விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதற்கான பணி யிட நிரப்புதல் தேர்வு நடைபெற வுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியான கல்வித் தகுதிகள், அனுபவம், வயது வரம்பு உள்ளிட்டவை அறிவிக் கையில் தரப்பட்டிருக்கிறது. முழுமை யான அறிவிக்கை மற்றும் விபரங்க ளை www.moefccrecruitment.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்ப தற்கான கடைசித் தேதி : மார்ச் 30, 2025 ஆகும்.

சிஎஸ்ஐஆர் (தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம்)

இந்த மையத்தில் 12 விஞ்ஞா னிகளின் பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். அதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. பல்வேறு துறை களில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நியமனத்திற்கான கல்வித் தகுதி கள் மற்றும் வயது வரம்பு அறிவிக்கை யில் உள்ளது. முழுமையான அறி விக்கை மற்றும் விபரங்களுக்கு www. niscpr.res.in என்ற இணையதளத் தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்ப தற்கான கடைசித் தேதி ஏப்ரல் 2, 2025 ஆகும்.

அணுசக்திக் கழகத்தில் 391 பணியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) பல்வேறு பணியிட ங்களை நிரப்புவத தற்கான அறி விக்கை வெளி யாகியுள்ளது. அறி வியல் உதவியா ளர், அறிவியல் உதவியாளர் (பயிற்சி), தொழில்நுட்பப் பணியாளர், உதவியாளர், செவிலியர், தொழில்நுட்ப உதவியாளர் (எக்ஸ்ரே) ஆகிய பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். மொத்தம் 391 இடங்க ளை நிரப்பும் இந்தப் பணியிட நிரப்பு தலில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி யான கல்வித்தகுதி மற்றும் தொழிற் திறன் தகுதிகள் அவசியமாகும். அவை அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளன. பணியிடங்களுக்குத் தனித்தனி யான வயது வரம்பும் உள்ளது. வயது வரம் பில் அரசு விதிமுறைகளின்படி இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு தளர்ச்சி உண்டு. முழுமையான அறிவிக்கை மற்றும் கூடுதல் விபரங்களுக்கு https://www.npcilcareers.co.in/KGS 20251203/candidate/Default.aspx என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற் குக் கடைசித் தேதி : ஏப்ரல் 1, 2025 ஆகும்.

வங்கியில் 159 மேலாளர் பணியிடங்கள்

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவில் முதன்மை மேலாளர், மூத்த மேலா ளர் மற்றும் மேலாளர் ஆகிய காலிப் பணி யிடங்களுக்கான அறி விக்கை வந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணி யாற்றிய அனுபவம் அவசியமாகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர் முகத் தேர்வு மூலமாக பணி நிரப்புதல் நடைபெ றும். இது குறித்த விபரங்களுக்கு www.banko findia.co.in என்ற இணையதளத்தைப் பார்வை யிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 23, 2025 ஆகும்.