tamilnadu

வேடந்தாங்கலில் 40 ஆயிரம் பறவைகள்

செங்கல்பட்டு, பிப்.14- தமிழகம் முழுவதும் கடந்த பிப்.12, 13 ஆம் தேதி களில் பறவைகள் கணக் கெடுப்பு துவங்கியது. மது ராந்தகம் ஏரி, வேடந்தாங் கல் ஏரி மற்றும் அதனை சுற்றி யுள்ள ஏரி, குளம் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கின்ற பற வைகள் கணக்கெடுப்பு நடத் தப்பட்டது. இதில் வேடந்தாங் கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்  75 வகையான 40 ஆயிரம் பறவைகள் இருப்பதாக கணக்கெடுக் கப்பட்டது.  மேலும், பறவைகளை காண சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகரித்து வருகிறது. தற்பொழுது, கொரோனா நோய்த் தொற்று குறைந்து காணப்படுவதால் கூடுதல் தளர்வுகளை அரசு  அறிவித்துள்ளதால் வார  இறுதி நாட்களான சனி மற் றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் எண் ணிக்கை அதிகரித்து வருகி றது.