tamilnadu

2 ஆம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

2 ஆம் கட்ட மாணவர்  சேர்க்கை கலந்தாய்வு

ஜுன் 9 குடவாசல்  அரசு கல்லூரியில் 

திருவாரூர், ஜுன் 7-  குடவாசல் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2 ஆம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜுன் 9 ஆம் தேதி, நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பி.ஏ. தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம் மற்றும் பி.எஸ்சி. கணினி அறிவியல் என ஐந்து பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கடந்த ஜுன் 2 அன்று சிறப்பு ஒதுக்கீட்டிற்கான (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள்) கலந்தாய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது காலியாக உள்ள பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பி.எஸ்சி கணினி அறிவியல், மற்றும் கணிதம் பாடப்பிரிவுகளுக்கு ஜுன் 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது.  இதில் இணைய வழி மூலம் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மேற்குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது கீழ்க்கண்ட சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும். இணைய வழி விண்ணப்ப நகல் 2 மற்றும் 10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல் 2, சாதி, வருமானச் சான்று நகல். 2, ஆதார் அட்டை நகல் 2, மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல் 2, இதர சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் நகல் 2 ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பசுபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.