tamilnadu

img

திருச்சி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த 100 ஆவது காக்லியர் இம்ப்ளாண்ட் அறுவைச் சிகிச்சை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20 - திருச்சி மகாத்மா காந்தி அரசு  மருத்துவமனை 100-ஆவது காக்லி யர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சை யை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (எம்ஜிஎம்ஜிஹெச்) மற்றும் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு  மருத்துவக் கல்லூரியின் (கேஏபிவிஜி எம்சி) காது, மூக்கு மற்றும் தொண்டை துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் திங்கள்கிழமை  நூறாவது காக்லி யர் உள்வைப்பு (இம்ப்ளாண்ட்) அறு வை சிகிச்சையை மேற்கொண்டனர். லால்குடியை அடுத்த கொளக்குடி யைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அரசு மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காக்லியர் முதல் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 75 ஆவது அறுவை சிகிச்சையை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தியது.   

100-ஆவது காக்லியர் மாற்று அறுவை சிகிச்சையை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷனின் நிறு வனர் - இயக்குநர் டாக்டர் காமேஸ்வரன் பேசியதாவது:  திங்கள்கிழமை நடைபெற்ற அறுவை சிகிச்சையில் நான்கு வயது  சிறுவனுக்கு 100-ஆவது காக்லியர் உள்வைப்பு கருவி பொருத்தப்பட்டது. உலகில் பிறவி செவித்திறன் குறைபாடு என்பது மிகப்பெரிய குறை பாடு ஆகும். இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற பிரச்சனை அதிகம் உள்ளது. 1,000 குழந்தைகளில் ஆறு குழந்தைகள் காது கேளாமையுடன் பிறக்கின்றனர். செவித்திறன் குறைபாடு, பேச்சுக் குறைபாட்டிற்கும் வழிவகுக்கிறது. செவித்திறன் குறைபாட்டை போக்கு வதற்கு காக்லியர் உள்வைப்பு அறுவைச் சிகிச்சை பயனுள்ள ஒன்றாகும் என்றார். காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் எஸ்.பழனியப்பன் கூறுகையில், “இந்த அறுவைச் சிகிச்சைக்கு சுமார் ரூ.7.5 லட்சம்  செலவாகும். இரண்டு வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார். 100-ஆவது அறுவைச் சிகிச்சை மருத்துவ மாணவர்களுக்கு நேரடி யாக ஒளிபரப்பப்பட்டது. மருத்துவ மனை முதன்மையர் டி.நேரு, துணை முதல்வர் ஏ.அர்ஷியா பேகம், மருத்து வக் கண்காணிப்பாளர் இ.அருண் ராஜ், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டினர்.

காக்லியர் என்றால் என்ன?

காக்லியர் என்பது ஒரு கருவி.  உட்புறம் மற்றும் வெளிப்புறப் பாகங் களைக் கொண்ட ஒரு சிறிய மின்னணு சாதனம். இந்தச் சாதனம் ஒலி உணர்வை வழங்குவதோடு, கேட்ப தற்கு உண்டான நரம்பைத் தூண்டும். இந்த சிகிச்சை காது நன்றாக கேட்பதற்கு மட்டுமே உதவும். இதன் மூலம் ஒருவரின் காது கேட்கும் திறன் இழப்பை சரிபடுத்தவோ அல்லது குணப்படுத்தவோ வாய்ப்பில்லை. பொதுவான மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு காக்லியர் கருவி  பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சையின் போது மாஸ்டாய்டு எனப்படும் பொட்டெலும்பைத் திறக்க காதுக்குப் பின்னால் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது. கோக்லியாவை பொருத்துவதற்கு முக நரம்பைக் கண்டறிந்து, அவற்றுக்கு இடையே ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்படு கிறது. பின் கோக்லியா- (மின்னணு  சாதனம்-ரிசீவர்) வின் உள்வைப்பு மின்முனைகள் அதில் செருகப்படு கின்றன. தொடர்ந்து அது காதுக்குப் பின்னால் வைக்கப்பட்டு அந்த பகுதி  மூடப்படுகிறது. நோயாளியின் நிலை யைப் பொறுத்து காக்லியர் கருவி யைப் பொருத்தும், அறுவைசிகிச்சை சுமார் 2-4 மணி நேரம் நீடிக்கும். 

அறுவைச் சிகிச்சைக்குப்  பிறகு என்ன நடக்கும்?

நோயாளிக்கு வலியைக் கட்டுப்படுத் தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். அவர்கள் சுகமடைவதன் அடிப்படை யில் டிஸ்சார்ஜ் செய்வது திட்டமிடப் படும். நோயாளியின் தொடர் கண்கா ணிப்பு வருகை திட்டமிடப்படும். 4-6 வாரங்களுக்குப் பிறகு, சாதனத்தின் வெளிப்புற பகுதி சேர்க்கப்படும். வெளிப்புற சாதனத்தைப் பராமரிப் பது மற்றும் அதை எவ்வாறு பயன்படு த்துவது என்பது பற்றி விவரிக்கப் படும். பேச்சு மொழி சிகிச்சையாளர் களை சந்திப்பதற்கும் பரிந்துரைக்கப் படலாம். காக்லியர் பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளும் பயன டையலாம். அவர்கள் பேச்சு மற்றும் மொழித் திறன்களைக் கற்றுக் கொள்ளும் முக்கியமான காலகட்டத் தில் சப்தங்களை கேட்க இது மேலும் உதவி செய்யும்.  காக்லியர் கருவியைப் பொருத் தும் முன் அதற்கான நிபுணரை சந்திக்க வேண்டும். அவர்கள் சில கேள்வி கள் கேட்பார்கள் மற்றும் பிற நிபுணர் களிடம் (ஆடியோலஜிஸ்ட், பேச்சு- மொழி சிகிச்சையாளர்கள் போன்ற வர்கள்) அவர்களுடைய கருத்துக் களை கேட்பதற்காக அனுப்பப்படு வார்கள். அவர்கள் அளிக்கும் தக வல்களின் அடிப்படையில், காக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சைக்கு நீங்கள் பொருத்தமான வரா என்பது பற்றி முடிவு எடுக்கப் படும். இந்தச் சிகிச்சை மூலம், வாய் அசைவைப் பார்க்காமலே நன்றாக கேட்கும் திறன் கிடைக்கும். தொலை பேசியில் ஒருவர் பேசுவதை நன்றாகக் கேட்கவும் பேசவும் முடியும்.