ஓரிரு வாரங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’
அமைச்சர் தகவல்
சென்னை, ஜூன் 8 - தமிழகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொள் ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டா லின் திட்டம், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இன்னும் ஓரிரு வாரங் களில் தொடங்கப்படும் என்றும், இதில் மக்கள் முழுமையாக உடல் பரி சோதனை செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய மருத்துவக் கட்டமைப்பு இந்த திட்டத்தின்கீழ் புதிய மருத்து வக் கட்டமைப்பு உருவாகி வருகிறது. இதில் சென்னைக்கு சிறப்பான இடம் இருக்கும். வெளிநாட்டிலிருந்து 25 சத வீதம் பேர் தமிழகத்தில் சிகிச்சைக் காக வருகிறார்கள். அனைத்துத் துறை களிலும் தமிழகம் நாட்டிலேயே முன் னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறி னார். திட்டத்தின் விவரங்கள் முன்னதாக தமிழகம் முழுவதும் உயர் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ரூ.13.58 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி பொது சுகாதாரத் துறை சார்பில் ஆண்டுதோறும் 1,256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப் பட உள்ளன. பரிசோதனை விவரங்கள் உடல் பரிசோதனையில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ உள்பட முழுமையான உடல் பரிசோத னைகள், காசநோய், தொழு நோய், புற்றுநோய் பரிசோத னைகள் மேற்கொள்ளப்படும். இதைத் தவிர 15 உயர் சிறப்பு மருத்துவ துறை ஆலோச னைகளும் வழங்கப்படும். நிதி ஒதுக்கீடு ஒரு முகாமுக்கு ரூ.75 ஆயிரம் வீதம் 1,256 முகாம்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13.58 கோடி செலவு ஏற்படும். அதில் ரூ.9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட நிதியின் கீழ் பெறப்படும். மீதமுள்ள ரூ.4.15 கோடி மட்டும் பரிசோதனைக்கான உபகர ணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்க மாநில நிதியிலிருந்து வழங்கப் படும்.