tamilnadu

img

மணிப்பூரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்   

மணிப்பூர் உக்ருல் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. 

சனிக்கிழமை காலை 10.19 மணியளவில் உக்ருல்  பகுதியில், 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் அதன் வரையறையில், அளவு 4.0, 10:19:26, லாட் 24.92, நீளம் 93.88, ஆழம் 30 கி.மீ என தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை என கூறியுள்ளது.

இன்று காலை, மணிப்பூரின் சேனாபதி பகுதியில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 6.54 மணியளவில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

;