tamilnadu

பெரம்பலூர், நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
பெரம்பலூர், ஆக.12-பக்ரீத் பண்டிகையை ஒட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். பெரம்பலூரில் மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு சிறப்பு தொழுகை திங்களன்று நடந்தது. முன்னதாக டவுன் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு அனைத்து முஸ்லீம்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் டவுன் பள்ளிவாசல் இமாம் சல்மான்ஹஜ்ரத் சிறப்பு தொழுகையை முன்னின்று நடத்தி வைத்தார். நூர்பள்ளிவாசல் முஸ்தபா ஹஜரத், குர்ஆன் வசனமான குத்பா ஓதி தொழுகையை தொடங்கி வைத்தார். இதே போல துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் வடக்குமாதவி சாலையில் உள்ள மக்கா, நூர்பள்ளிவாசல்கள், பாரதிதாசன் நகரில் உள்ள பள்ளி வாசல், ஆலம்பாடி சாலையில் உள்ள கலிபா பள்ளிவாசல் ஆகியவற்றில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.  கும்பகோணம் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கம் இணைந்து பக்ரீத் தொழுகை கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு தொழுகை யில் பெரியவர்கள் சிறியவர்கள் உள்பட 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு கலந்து கொண்டு உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர். ஒருவரை ஒருவர் தழுவி தியாக திருநாளில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.  அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகி கள் பசீர் அகமது, அப்துல் சுபுஹான், கமாலுதீன், முகம்மது ஜியாவுத்தீன், அய்யூப் கான் மற்றும் கிஸ்வா நிர்வாகி கள் இமாம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது போல் மேலக்காவேரி, சோழபுரம், ஆவணியாபுரம் போன்ற பகுதிகளில் ஜமாத்தார்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகளும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

மணல் கடத்திய வாகனம் பறிமுதல் 
சீர்காழி, ஆக.12-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திரு மயிலாடி கிராமம் மெயின் ரோட்டைச் சேர்ந்த ராம மூர்த்தி(50) என்பவர் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி யில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்து கொண்டி ருந்தார். அப்போது கீரங்குடி என்ற இடத்தில் கொள்ளி டம் காவல்துறையினர் மாட்டு வண்டியை மடக்கி பிடிக்க முற்படும் போது ராமமூர்த்தி தப்பி ஓடி விட்டார். மணலுடன் வண்டியை பறிமுதல் செய்து தப்பிய ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.