tamilnadu

img

கல்விக்கட்டண உயர்வை திரும்பப்பெறுக பாண்டிச்சேரி பல்கலை.மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக!

எஸ்எப்ஐ வலியுறுத்தல்

சென்னை,பிப்.26-  கல்விக்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின்  மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன்,  மாநிலச் செய லாளர்  வி.மாரியப்பன்  ஆகியோர் வெளி யிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் தனது பட் ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கிய நிதியை வெட்டி சுருக்கி 4.7 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாக குறைத்துள்ளது.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டண உயர்வு போல பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் ஏற்கனவே இருந்த கல்வி கட்டணத்திலிருந்து 225 மடங்கு கூடுதலாக கட்டண உயர்வு செய்தது. பாண்டிச்சேரி  மாணவர்கள் மற்றும்  பொது மக்களின்  நீண்ட நாள் கனவு கோரிக்கையான பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு  816 ஏக்கர் பரப்பளவில்  விவசாயி களின் விளைநிலங்களை பெற்று துவங்கப்பட்டது. பாண்டிச்சேரியின் ஏழை எளிய மாண வர்கள் உயர்கல்வி  கற்கும் வகையில்  அப்பொழுது இருந்த 21 துறைகளில்  25 சதவீத ஒதுக்கீட்டை 1997ஆம் ஆண்டு ஞானம் என்ற பல்கலைக்கழக துணைவேந்தர்   ஒதுக்கினார். அதன் பிறகிலிருந்து தற்பொழுது வரை பல்கலைக் கழகத்தில் துவங்கப்பட்ட மற்ற துறைகளில் இடஒதுக்கிடு இன்றுவரை வழங்கப்படவில்லை. 

பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்திய கல்வி கட்டண உயர்வை எதிர்த்து பல்கலைக்கழக மாண வர்கள், இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர் . இதற்கிடையில் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் கல்வி கட்டண உயர்வை பரிசீலனை செய்ய கிரைவன்ஸ் கமிட்டி நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்தில் ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.  இதுவரை நான்கு முறை  இக்கமிட்டியுடன் மாணவர் பேரவை சார்பாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் கட்டண உயர்வு, இலவச பேருந்து சேவையை தொடர்ந்து இயக்குதல், புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடை பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில்முடிவுற்றது.

மாணவர்களின் நியாயமான கோரிக்கை யை பரிசீலிக்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வ ராத சூழலில் மாணவர் பேரவை காலவரையற்ற போராட்டத்தில் கடந்த 20 நாட்களாக பல்கலைக் கழக நிர்வாக கட்டிடத்தில் அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமியை திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினர் ஆர். சிவா அவர்களுடன் சென்று  பல்கலைக்கழக மாணவர் பேரவை  மற்றும் அனைத்து மாண வர் இளைஞர் அமைப்புகள் சார்பில்  சந்தித்து  மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத் தோடு பேசி பல்கலைக்கழக கல்வி கட்டண உயர்வை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தனர். 

இதுநாள் வரை மாநில மாணவர் நலன், உரிமை சார்ந்த கோரிக்கைக்காக போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி முதல்வர் அமைதி காத்து வருவது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில்  பல்கலைக்கழக வளாகத்தில் 20-வது நாளாக ஜனநாயக முறையில் அமைதி யாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை பல்கலைக்கழக பட்டமளிப்பு  விழாவிற்கு துணை ஜனாதிபதி வருவதை கார ணம் காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதலில் ஈடுபட்டு கைது செய்து பல்கலைக்கழக வளாகத்தில் அடைத்து வைத்துள்ளனர். 

இத்தாக்குதலில் பாண்டிச்சேரி பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் உள்ளிட்ட பல மாணவ மாணவிகளுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள் ளது. மாணவிகள் என்று கூட பாராமல் ஆடை யைப் பிடித்து இழுத்து கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது.  எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடி யாக தலையிட்டு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழக கல்வி கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 21 பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை போல புதிதாக தொடங்கப்பட்ட மற்ற துறைகளுக்கும் பாண்டிச்சேரி மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மாணவர்களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.