2 ஆண்டுகளாக தொடர்ந்து 8 சதவிகித வளர்ச்சி
புதுதில்லி, ஜூன் 23 - எல்லையில், சீனாவுடனான மோதல் மற்றும் உயிரிழப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருட்களை புறக்கணிs Business in Chinaப்பது, வர்த்தகத்தை தடை செய்வது என்று முழக்கங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், சீன பொருட்களைப் புறக்கணிப்பது, அந்நாட்டிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; மாறாக, இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை அது ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புத் தொழிலை சீனாவில் நடத்தி வரும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த “சுந்தரம் பாஸ்ட்னர்ஸ்” (Sundram Fasteners (Zhejiang) Ltd.) நிறுவனம், தங்களின் தொழில், சீனாவில் தொடர்ந்து லாபகரமாக இருப்பதால், தொழிலை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
“நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக சீனாவில் இருக்கிறோம். சீனாவின் சந்தையை நாங்கள் புரிந்து கொண்டோம். சீன வாடிக்கையாளர்கள் இப்போது “சுந்தரம் பாஸ்ட்னர்ஸ்” நிறுவனத்தை நம்பகமான சப்ளையராக அங்கீகரிக்கின்றனர். நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவிதம் ஒருங்கிணைந்த வளர்ச்சி விகிதத்தை (Compound annual growth rate - CAGR) கண்டிருக்கிறது என்று “சுந்தரம் பாஸ்ட்னர்ஸ்” நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் அருந்ததி கிருஷ்ணா கூறியுள்ளார். மேலும், “இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பொருளாதாரங்களிலும் எங்களின் செயல்பாடு தொடரும்” என்று கூறியுள்ள அருந்ததி கிருஷ்ணா, சீனாவில் பாஸ்டென்சர்கள், மெஷின் காஸ்டிங்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிவுகளில் “சுந்தரம் பாஸ்ட்னர்ஸ்” நிறுவனம், தனது தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “சுந்தரம் பாஸ்ட்னர்ஸ்” நிறுவனம் சீனாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 250 கோடி ரூபாய் லாபமீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.