tamilnadu

img

 பசுக்களை சாப்பிடும்  புலிகள் தண்டிக்கப்பட வேண்டுமாம் -கோவா சட்டமன்றத்தில் எம்எல்ஏ விவாதம்

பசுக்களை உண்ணும் புலிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோவா தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சர்ச்சில் அலெமாவோ கூறி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் 5 பேரால் ஒரு புலி மற்றும் அதன் மூன்று குட்டிகள் கொல்லப்பட்டன. இச்சம்பவம்  தொடர்பாக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது கவன ஈர்க்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவையில் எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ, மனிதர்கள் தண்டிக்கப்படும்போது பசுக்களை சாப்பிடும்  புலிகள் தண்டிக்கப்பட வேண்டும். புலி ஒரு மாடு சாப்பிடும்போது அவருக்கு என்ன தண்டனை? ஒரு மனிதன் பசுவை சாப்பிடும்போது, ​​அவன் தண்டிக்கப்படுகிறான். வனவிலங்குகளைப் பொருத்தவரை, புலிகள் முக்கியம், ஆனால் மனிதர்களைப் பொருத்தவரை, மாடுகள் முக்கியம் என்றார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த், புலிகள் தங்கள் கால்நடைகளைத் தாக்கியதால் உள்ளூர்வாசிகள் புலிகளை கொன்றனர்.  கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.