பீகார் தேர்தல்: பின்வாங்கினார் அமித் ஷா
புதுதில்லி:
நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து பிகாரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. அண்மைக் காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் எழுந்ததால், சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை கழற்றிவிடும் முடிவுக்கு நிதிஷ்குமார் வந்தார். இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித் துள்ள பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலேயே தேர்தலைச் சந்திப்போம்என்று பின்வாங்கியுள்ளார்.
மத்திய அரசுக்கு குற்றவுணர்வு வரவில்லையா?
புதுதில்லி:
இந்தியப் பொருளாதாரம் நிலையற்று, அந்தரத்தில் தொங்குவதாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி கூறியிருக்கும் நிலையில், அவரின் இந்தகூற்று, பாஜக அரசுக்குஎந்தவித குற்றவுணர்வையும் ஏற்படுத்தவில்லையா? என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். “பொரு ளாதார நிபுணர்கள் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து தெரிவிக்கும் கருத்துக்களை தினமும் சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிடுகிறேன். மத்திய அரசே தீர்வு காணட்டும்’ என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா எம்.பி.க்கு கத்திக்குத்து
மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, உஸ்மானாபாத் மாவட்டத்தில் அந்த தொகுதியின் சிவசேனா எம்.பி. ஓம்ராஜ் நிம்பல்கர்பிரசாரத்தில் ஈடுபட்டுள் ளார். அப்போது, படோலிநைகான் என்ற கிராமத் தில், கை குலுக்குவது போல வந்த ஒருவர், திடீரென கத்தியை எடுத்துகுத்தியுள்ளார். நல்வேளை யாக ஓம்ராஜ் கையில் வாட்ச் கட்டியிருந்ததால் நரம்புகளில் கத்தி படாமல் தப்பித்து விட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி.யை வளைத்த பாஜக
பெங்களூரு:
கர்நாடகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான கே.சி. ராமமூர்த்தி, புதன்கிழமையன்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய் துள்ளார். விரைவில் அவர்பாஜக-வில் இணையவுள் ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசைசேர்ந்த புவனேஷ்வர் கலிதா, சஞ்சய் சிங் உள்ளிட்டவர்களும் இதேபோல பாஜகவுக்கு வளைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.