ஏழு மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து, அக்டோபர் 15ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இயக்கப்படும் இரு திரையரங்குகளில் ஒருநாளைக்கு மூன்று காட்சிகளைத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் உடல் வெப்பநிலை சோதனை, முககவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளை திரையரங்கினர் செய்துள்ளனர்