tamilnadu

img

சுரேந்திரநாத் பானர்ஜி பிறந்தநாள்...

சர் சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய மக்கள்அரசியல் உரிமைகளைப் பெறவும், அரசு நிர்வாகத்தில்பங்கு பெறவும் ஓர் அமைப்பு அவசியம் என்று கருதினார்.ஆனந்த மோகன் போஸ் என்பவருடன் சேர்ந்து 1876ஜூலை 26ல் இந்திய தேசிய சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

கல்கத்தாவில் மெட்ரோபாலிட்டன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1882-ல் ரிப்பன் கல்லூரியை (தற்போதைய சுரேந்திரநாத் கல்லூரி) தொடங்கி அதில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களின் வயது வரம்பு பிரச்சனைக்கு இதன்மூலம் தீர்வு கண்டார். ஆங்கில அரசின் இன வேறுபாட்டை எதிர்த்து நாடு முழுவதும் போர்க் குரல் எழுப்பினார்.பெங்காலி என்ற ஆங்கில நாளிதழை 1878-ல் தொடங்கினார். இதில் ஆங்கில அரசுக்கு எதிராக எழுதியதால் கைது செய்யப்பட்டார்.1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் முக்கியப் பங்கு வகித்தார். தனது அமைப்பை அதனுடன் இணைத்தார். வளரும் தலைவர்களான கோபால கிருஷ்ண கோகலே, சரோஜினி நாயுடு போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். போராட்டம், பொதுக்கூட்டம், மனு கொடுப்பது, சட்டரீதியிலான நடவடிக்கை என மிதவாதப் போக்கையே பின்பற்றினார். வங்கப் பிரிவினைக்கு இவர் தெரிவித்த எதிர்ப்பு, அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து சுதேசி இயக்கத்தின் முக்கியத் தூணாக செயல்பட்டார்.

ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர். சரளமான, ஆழமான சொல்லாற்றல் இவரை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகச்  செய்தது. ஆங்கிலேயரும் மதித்துப் போற்றும் தலைவராக விளங்கினார். வங்காள அரசில் அமைச்சராகப் பணிபுரிந்தபோது, கல்கத்தா மாநகராட்சி நடவடிக்கைகளில் ஜனநாயக நெறிகளை பிரதிபலிக்கச் செய்தார். பானர்ஜி 77-வது வயதில் மறைந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===