tamilnadu

img

பொலிவியாவில் வலதுசாரி ராணுவ சதி

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

புதுதில்லி, நவ.18-  பொலிவியாவில் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உள்நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் அரசாங்கம் வலதுசாரி ராணுவ சதி மூலமாகக் கவிழ்க் கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  புதுதில்லியில் நவம்பர் 16, 17 தேதி களில் நடைபெற்ற கட்சியின் அரசியல் தலை மைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இது தொடர்பாக கூறியிருப்ப தாவது:   அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரடியாக வும் வெட்கமற்றமுறையிலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள்நாட்டு விவகா ரங்களில் தலையிடுவது, பல நாடுகளில் உள்ள மக்களால் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முற்போக்கு இடதுசாரி அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கு வலதுசாரி சக்திகளுக்கு ஊக்கத்தை  அளிக்கிறது. பிரேசிலில், தனக்குத்தானே ஜனாதிபதியாக பிரகடனம் செய்துகொண்ட பாசிஸ்ட் பொல்ச னாரோ, இடதுசாரி மத்திய அரசாங்கத்தை கவிழ்த்தும், முன்னாள் ஜனாதிபதிகள் லூலா மற்றும் டில்மா ரூசெப் ஆகியோ ரைக் கைது செய்தும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் ஆதரவுடன்  தேர்வு செய்யப்பட்டி ருக்கிறார். இந்தப் பேர்வழியைத்தான் மோடி அரசாங்கம் 2020 குடியரசு தின அணிவகுப்பு க்கு தலைமை விருந்தினராக வரவேற்றி ருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், வெனிசுலா விலும் மதுரோ அரசாங்கத்தைக் குறிவைத்து  வெட்கமற்ற முறையில் தலையிடுவது தொடர்கிறது. அவரது அரசாங்கத்தை வீழ்த்து வதற்காக நேரடியாகவே வலதுசாரி சக்திக ளுக்கு நிதி உதவியைச் செய்து வருகிறது. ஆயினும் இத்தகைய வலதுசாரி தாக்குதல்களுக்கு எதிர்ப்பும் அர்ஜெண்டி னா, சிலி போன்ற நாடுகளில் கடும் எதிர்ப்பும்  எழுந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. வலதுசாரி அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையேயான போராட்டம் இந்த கண்டத்தின் எதிர்கால அரசியலாக அமைந்திடும்.