சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் கடும் தாக்கு
காஞ்சிபுரம்,செப். 23- தொழில்நகரங்களை மயானங்களாக மோடி அரசு மாற்றிவருவதாகவும் கார்ப்ப ரேட் நிறுவனங்களோடு மத்திய அரசு கைகோர்த்துக்கொண்டு தொழிலாளர் களைச் சூறையாடி வருவதாகவும் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் குற்றம்சாட்டி னார். காஞ்சிபுரத்தில் சிஐடியு தமிழ் மாநில 14ஆவது மாநாட்டின் நிறைவு நாளான ஞாயி றன்று (செப்.22) நடைபெற்ற மாபெரும் பொதுக்க்கூட்டத்தில் அவர் பேசியது வருமாறு: அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை தாஜா செய்ததெல்லாம் அந்தக்காலம். இப்போது அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கை கோர்த்துக் கொண்டு நாட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். தொழிலாளர் கள்தான் இந்த நாட்டினுடைய செல்வங் களையெல்லாம் உருவாக்குபவர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கு பவர்கள். தொழிலாளர்களால்தான் பொருளா தாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு தொழிலாளி வர்க்கத்தை எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாம், சூறையாடலாம் எனத் திட்டமிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
தொழில்களுக்கு மூடு விழா
சங்கம் அமைக்கும் உரிமை உட்பட தொழிற்சங்க உரிமைகளைப் பறித்து வரு கிறார்கள். தொழிலாளர்களை அடிமை களாக்கக் கூடிய வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தினு டைய ரத்தத்தை உறிஞ்சி உள்நாட்டு முதலாளி களுக்கும், அந்நிய முதலாளிகளுக்கும் சேவகம் செய்கிறது மத்திய அரசு. லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆட்டோ மொபைல் தொழில், எஞ்ஜினியரிங் தொழில் என பல தொழில்கள் முடங்கியுள்ளன. மோடி அரசின் கொள்கைகள் பெருவாரியான தொழில்களுக்கு மூடுவிழா நடத்தி, தொழில் நகரங்களையெல்லாம் மயானமாக மாற்றி வருகிறது. இதனால் அந்நிய நிறுவனங்கள் இந்தியாவிற்கு தங்களது சரக்குகளை கொண்டு வந்து கொள்ளை லாபமீட்டும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன.
முதலாளிகளுக்கு வரிக் குறைப்பு
ஒரு எளிய மனிதர் கடையில் சென்று எந்தப் பொருளை வாங்கினாலும் அவர் மறைமுகமாக சராசரியாக 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியுள்ளது. தனியார் நிறுவன தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் 30 விழுக்காடு வருமான வரி செலுத்து கிறார்கள். மேலும் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால் தொழி லாளர்களை உறிஞ்சி அதிக லாபமீட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 35 விழுக் காடாக இருந்த வரி 22 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
செப்.30ல் போராட்ட அறிவிப்பு
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு திருத்தம் செய்ய முயற்சித்து வருகின்றது. சிஐடியு, ஏஐடியுசி, எல்.பி.எப் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர் சம்மேளனங்கள் இணைந்து செப்டம்பர் 30 அன்று தில்லியில் மாபெரும் மாநாட்டை நடத்தவுள்ளன. அந்த மாநாட்டில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். மனிதன் மனிதனாக வாழ்வதற்கு போராட வேண்டியுள்ளது. ஒட்டுமொத்த தொழி லாளி வர்க்கத்தையும் ஒன்றுபடுத்தி நம் உரிமைகளை பாதுகாக்கவும், சுரண்டலுக்கு எதிராகவும் போராடுவோம்.
ஏ.கே.பத்மநாபன்
சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், அடக்குமுறை ஆணவம், காட்டு தர்பார் என்ற நிலையில் 1967, 68, 69களில் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டங் களுக்குத் தலைமை தாங்க ஒரு போர்க்குண மிக்க, வர்க்க உணர்வுடைய தொழிற்சங்கம் வேண்டும் என்ற நிலையில் 1970ஆம் ஆண்டு மே 27 அன்று உருவானதுதான் சிஐடியு அமைப்பு. தோழர் வி.பி.சிந்தன் போன்ற மாபெரும் தலைவர்களின் குருதியை சிந்தி உருவாக்கப்பட்ட இயக்கம் சிஐடியு.
திருப்பெரும்புதூர் பகுதியில் போரா டும் இளம் தொழிலாளர்களும், தமிழ கத்தின் மற்ற பகுதிகளில் போராடும் தொழி லாளர்களும் துணிவு கொள்ளுங்கள். இந்த நாடு எப்போதும் உழைப்பாளி மக்களுக்கு துணை நிற்கும். சிஐடியுவின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடும் காலத்தில் திருப்பெரும்புதூர் உள்ளிட்ட பகுதி களில் இளம் தொழிலாளர்கள் போராடுகின்ற னர். இது உங்களுக்கான போராட்டம் இல்லை, நாட்டுக்கான போராட்டம், மக்களுக்கான போராட்டம் என்றார். சிஐடியுவின் 16வது அகில இந்திய மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களின் பிரதிபலிப்பாக இந்த மாநாடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.