tamilnadu

img

ஜேஎன்யு தாக்குதல்: மாணவர் பேரவை தலைவர் உள்ளிட்ட 20 பேர் படுகாயம்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் , முகமூடி அணிந்த  குண்டர்கள் தாக்கியதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் உள்ளது. 
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அப்பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் கொடுத்த தகவலின் பேரில் பல்கலைக்கழகத்திற்கு வந்த காவல் துறையினர் பல்கலை கழக வளாகத்தில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. மேலும் இரவு 9.30 மணியளவில் ஜாமியா மில்லியா மற்றும் தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் தில்லி போலீஸ் தலைமையகம் முன் விடிய விடிய  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த தாக்குதலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை  குற்றம்சாட்டியுள்ளது. 
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

;