புதுதில்லி, செப். 26 - காசாவில் நடத்தி வரும் யுத்தத்தை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, ‘அக்டோபர் 7’ அன்று பாலஸ்தீன ஒருமைப்பாட்டு நாள் கடைப்பிடிக்கு மாறு இடதுசாரிக் கட்சிகள் அறை கூவல் விடுத்துள்ளன.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரகாஷ் காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் து. ராஜா, இந்தியக் கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) கட்சி சார்பில் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார் வர்ட் பிளாக் சார்பில் ஜி. தேவராஜன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி சார்பில் மனோஜ் பட்டாச்சார்யா கையொப்ப மிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ள னர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:
42 ஆயிரம் பாலஸ்தீனர்களை கொன்றழித்த இஸ்ரேல்
அக்டோபர் 7-ஆம் தேதியுடன், காசாவில் இஸ்ரேல் இனப்படு கொலை யுத்தத்தைத் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. சென்ற ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ் ரேலுக்குள் ஹமாஸ் தாக்குதல் தொடுத்ததற்கு எதிராகப் பழிவாங்கு கிறோம் என்ற பெயரில் இஸ்ரேலிய ராணுவம் காசாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகவும் கொடூரமாகவும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்த யுத்தத்தின் காரண மாக சுமார் 42 ஆயிரம் பாலஸ்தீனர்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கட்டடங் களின் இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் குடியிருக்கும் கட்டடங் களையும், பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் கூட, இஸ்ரேல் தமது காட்டுமிராண்டித் தனமான வான்வழி தாக்குதல்களி லிருந்தும், தரைவழி வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்தும் விட்டு வைக்கவில்லை. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக நேரடி யாகவும், இல்லாமலும் ஆகஸ்ட் 6 அன்று வரையிலான கணக்கின்படி 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று ‘லான்செட்’ என்னும் நம்பகம் மிகுந்த மருத்துவ இதழ் தெரிவிக்கிறது.
அப்பட்டமான இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றம் குற்றச்சாட்டு
சர்வதேச நீதிமன்றம் (ICJ) இந்த ஆண்டு ஜனவரியில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை, ‘இனப்படு கொலைக்கு இட்டுச் செல்வதாக’க் குறிப்பிட்டிருக்கிறது. ‘காசாவில் அது தன்னுடைய ராணுவ நடவடிக்கை களை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் கோரி இருக்கிறது. போர் நிறுத்தத்திற்காக உருப்படியான பேச்சுவார்த்தைகள் எதற்கும் இஸ்ரேல் முன்வரவில்லை.
அதுமட்டுமல்ல, இந்த ஆண்டு முழுவதுமே, இஸ்ரேலினால் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரை (West Bank)யில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் களைத் தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறது. வெடிகுண்டுத் தாக்குதல் களுக்கும், இந்த மோதலை லெபனா னுக்குள்ளும் விரிவுபடுத்துவதற்கு பேஜர்கள் உள்ளிட்ட பல தகவல் தொடர்பு சாதனங்களையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
அநீதியான யுத்தத்திற்கு எதிராக உலக மக்கள் போராட்டம்
இஸ்ரேலின் இனப்படுகொலை யுத்தத்திற்கு எதிராகவும், இந்த யுத்தத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும் உலகம் முழு தும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இஸ்ரேல் அதன் காட்டுமிராண்டித் தனமான யுத்தத்தைத் தொடங்கி ஓராண்டு நிறைவடையும், ‘அக்டோ பர் 7’ அன்று யுத்தத்திற்கு முடிவு கட்டும் நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைதியை விரும்பும் மக்கள் கோருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் ‘2024 அக்டோ பர் 7’ஐ உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்; பகைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்ற அறைகூவ லுக்கான நாளாகவும், பாலஸ்தீனத் திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகை யில் ஒருமைப்பாட்டு நாளாகவும் கடைப்பிடிக்க உள்ளன.
அன்றைய தினம் இஸ்ரேல் அதன் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடை பெறும் என்று அறிவித்துள்ள இடது சாரிகள் கட்சிகள், இந்திய அரசு இஸ் ரேலுக்கான அனைத்து ஆயுத ஏற்று மதிகளையும் நிறுத்த வேண்டும்; சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாகும் வகையில் ‘இரு நாடுகள்’ தீர்வுக்கு உழைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளன. (ந.நி.)