tamilnadu

img

இந்திய - சீன உறவு ஆசியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானது! வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சு

புதுதில்லி, செப். 25 - இந்திய - சீன உறவு, ஆசியா வின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஆசியா  சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடி யூட்-ல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“உலகளவில் ஆசிய நாடுகள் இன்று மாற்றத்திற்கான காலகட்டத்தில் உள்ளது. ஆசியாவில் அந்த மாற்றத்தை இந்தியா முன்னெடுத்து வருகிறது. இந்த மாற்றம் உலக அளவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆசியாவின் எதிர்காலத்துக்கு இந்திய - சீன உறவு மிகவும் முக்கியமானது என்று  நான் கருதுகிறேன். உலகம் பல துருவங் களாக இருக்குமானால் ஆசியாவும் பல துரு வங்களாக இருக்கும். அதனால் இந்திய - சீனா உறவுநிலை ஆசியாவின் எதிர் காலத்தை மட்டும் பாதிக்காது, அந்த வகையில் உலகின் எதிர் காலத்தையும் பாதிக்கும்.

ஆசியாவை (ASEAN) மைய மாகக் கொண்ட ‘ஆக்ட் இஸ்ட்  பாலிசி’-யை நீண்டகாலமாக நாம் பின்பற்றி வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் அது ஆசியாவைக் கடந்து வளர்ச்சியடைந்திரு ப்பதை நாம் காண்கிறோம்.  ஆசியாவின் எதிர்காலம் உலகத்திற்கே மிகவும் வலு வூட்டுவதாக உள்ளது. எனவே இந்திய - சீன உறவுநிலை ஆசியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்திற்கும் முக்கியம்.  தற்போதைய சூழ்நிலையில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு இந்தியா தயாராக வேண்டும். அதற்கான சாதக மான சூழ்நிலையையும் உருவாக்க வேண்டும். உலகின் சிறந்த பொருளாதாரங் களில் ஆசிய நாடுகள் நல்ல முன்னேற்றத் தை கொண்டுள்ளன. கடந்த சில வருடங் களுக்கு முன் இருந்தநிலையிலிருந்து இது  மிகவும் முன்னேற்றம்  டைந்துள்ளது. விரை வில் உலகின் மூன்றாவது பெரிய பொரு ளாதார நாடாக இந்தியா உருவாகும்” என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.